Powered by Blogger.

Tuesday 29 June, 2010

மானாவாரிகள் மறைந்த மர்மம் என்ன?

இருபத்து ஒன்றாவது நூற்றாண்டில் மனித சமுதாயம் பறிகொடுத்த இயற்கைவள இழப்புகளில் இந்தியாவைப் பொருத்தவரை உடல் வளத்துக்கும், நலவாழ்வுக்கும் அடிப்படையாயிருந்தவை மானாவாரி உணவுப்பயிர்களான புஞ்சைத் தானியங்களும் பருப்புவகைப் பயிர்களும் என்றால் அது மிகை இல்லை. மணல் கொள்ளையைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். மக்களுக்கு ஊட்ட உணவை விளைவித்துத்தரும் சத்தான மானாவாரி மண் இன்று கொள்ளை போவதைப் பற்றி அதிகம் கேள்விப்பட்டிருக்க முடியாது. நாலுவழிச் சாலைகளும் எட்டுவழிச் சாலைகளும் உலக வங்கிக் கடனில் உருப்பெறுவது எவ்வளவு தூரம் தேவை என்று புரியவில்லை. நல்லுணவு விளைந்த மண்ணெல்லாம் விலை பேசி வீதி சமைக்கப்படுகிறது. மானாவாரிப் பயிர் சாகுபடி செய்து மகிழ்ந்த விவசாயிகள் வாழ்ந்த நாடு நமது பாரதம். இந்த இருபத்தி ஒன்றாவது நூற்றாண்டு இந்திய விவசாயிகள் நிலத்தை விற்பதில்கூட ஏதோ ஒரு நியாயம் உண்டு. ஆனால், மண்ணை விற்று மகிழ்வதில் என்ன நியாயம் உள்ளது? சாதாரணமாக ஒன்றும் விளையாத சுண்ணாம்பு மிகுந்த சரளை மண்ணைச் சாலை அமைக்கப் பயன்படுத்துவார்கள். இப்போது சரளை கிடைக்காமல் நன்கு பயிர் விளையக்கூடிய செவ்வல் பூமியெல்லாம் சாலையாகும் கொடுமையை எங்கு போய் முறையிடுவது? இந்தியாவில் பசுமைப்புரட்சி அறிமுகமான இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் - குறிப்பாக 1980-க்குப் பின்னர், பல வேறு காரணங்களினால் மானாவாரிகள் மறைந்தன. பிரிட்டிஷ் இந்திய ஆட்சியில் மைய வேளாண்மை அமைச்சரகம் உருவான காலகட்டத்தில் - இருபதாம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் - இந்தியாவின் விளைநில வரைபடம் தயாராகிப் பயிர் மண்டலங்கள் உருவாயின. முற்றிலும் வறட்சி, பகுதி வறட்சி, பாசனம் என்று விளைநிலம் தரம் பிரிக்கப்பட்டு தட்பவெப்பம், மண்ணுக்கு ஏற்ற பயிர் என்ற அடிப்படையில் பயிர்ப்பஞ்சாங்கம் வெளியிடப்பட்டது. இந்த அடிப்படையில் வறட்சிப்பகுதிப் பயிர்களை வேறு பெயரில் சொல்வதானால் மானாவாரிப் பயிர்கள் என்று சொல்லலாம். 1951 முதல் 1970 வரை இந்தியாவின் சாகுபடித் திட்டத்தில் சுமார் 70 சதம் புஞ்சைப் பயிர்களும் பயறுவகைப் பயிர்களும் சாகுபடியாகும் மானாவாரி நிலங்களே அதிகம் இருந்தன. குறைந்த செலவில் நிறைந்த மகசூல் பெற்ற காலம் மலையேறிவிட்டது. பருவம் தவறாமல் மழையும் பெய்தது. பத்தாண்டுத் தொகுதியில் ஓராண்டு மானாவாரி ஏமாற்றி விடும். மழைப்பொழிவு குறையும் வாய்ப்பு உண்டு. பயிர் மண்டல அடிப்படையில் சுமார் 70 சதவீத நிலம் அமைந்துள்ள மானாவாரி மிகுந்த மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. பின்னர் ஆந்திர மாநிலத்தின் மேற்குப் பகுதி, கர்நாடகம், மகாராஷ்டிரம், மத்தியப்பிரதேசம் அடங்கிய தக்காணப் பீடபூமி, தார்ப்பாலைவனம் அடங்கிய ராஜஸ்தானம் ஆகியவை. அத்தோடு ஹரியாணா, பஞ்சாப் மாநிலங்களின் மாபெரும் அணைக்கட்டு வழங்கும் கால்வாய்ப் பாசனம் ஏற்படுவதற்கு முற்பட்ட சூழலில் மானாவாரிப் பயிர்களே பரவலாயிருந்தன. பயிர் மண்டலங்கள் மானாவாரி என்றும் பாசனம் என்றும் வேறுபட்டன. மானாவாரி என்பது பருவமழையை நம்பிச் செய்யப்பட்ட விவசாயம். பாசனம் என்பது உரிய பட்டத்தில் ஆறு, குளம், ஏரி, கிணறு ஆகியவற்றின் நீரையும் சேர்த்து இயங்கிய விவசாயம். உண்மையில் முற்காலப் பாசன ஆதாரங்களான ஆற்றுவெள்ளம், ஏரி, குளம் எல்லாம் பருவமழையை நம்பி இயங்கியது. இப்படிப்பட்ட பாசன நிலங்களில் நெல், கோதுமை, கரும்பு பயிராயின. அறுவடைக்குப் பின் நஞ்சையில் புஞ்சையாகப் பருப்புவகைப் பயிர்களான உளுந்து, பாசிப்பயறு, காராமணி, வேர்க்கடலை போன்றவற்றுடன் கேழ்வரகும், மக்காச்சோளமும் பயிராகும். சற்று அதிக பாசன வசதி இருப்பின் கோடைகால இறைவைப் பயிர்களாகவும் சாகுபடியாகும். மானாவாரியில் சோளம், கம்பு, சிறு தானியங்களான தினை, சாமை, பனிவரகு என்ற காடைக் கனி, வரகு, குதிரைவாலி ஆகியவற்றுடன் துவரை, கொள்ளு, கடுகு, எள் ஆகியவை பயிராகும். பசுமைப்புரட்சியின் முன்னோட்டமாக மாபெரும் அணைக்கட்டு திட்டங்கள் 1950 - 60 காலகட்டத்தில் உருப்பெற்று கால்வாய்ப் பாசனம் மானாவாரி நிலங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டது. ஒரு பகுதி புஞ்சை நிலங்கள் நஞ்சையானபோது வடமாநிலங்களில் பருப்பு சாகுபடியும், தானிய சாகுபடியும் குறிப்பாக கம்பு, இயல்பாக வளரக்கூடிய தீவனப் புற்கள் ஆகியவை மறைந்தன. நெல் சாகுபடி அறிமுகமானது. ÷வடமாநிலங்களில் பருப்பும், புஞ்சை தானியங்களும், தீவனப் புற்களும் விளைந்த இடங்களில் ஆற்று நீர்க்கால்வாய்கள் வந்ததும் நெல், கோதுமை, மக்காச்சோளம் பயிரிட்டுப் பயிர் மண்டலத் திட்டமே மாற்றப்பட்டது. பொதுவாக, இன்று நெல் விளையும் மேற்கு உ.பி., பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களில் மக்கள் கோதுமையையே முழு உணவாக உண்பார்கள். மலைப்பகுதிகளில் சிறப்புமிக்க பாசுமதி நெல் விளையும். உதாரணமாக,டேராடூன், சிம்லா, ஹிமாசலப் பிரதேசம், பாகிஸ்தானை ஒட்டிய சிந்து நதியின் மையப்பகுதிகளில் பாசுமதி நெல் சாகுபடி குறைந்த நீர் செலவில் பயிராகும். பிரியாணிக்கு மட்டுமே பாசுமதி அரிசி பயனாகும். அன்றாட உணவுத்திட்டத்தில் அரிசி கிடையாது. இம்மக்கள் அதிகமாகப் பருப்புவகைகளை உண்டு ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள். ஆனால், இன்று அரசின் கொள்முதல் திட்டத்துக்காக மோட்டா ரக நெல் சாகுபடி செய்வதுடன், அவர்களுக்கு நெல் முக்கிய வணிகப்பயிராகிவிட்டது. உபரி வைத்துக் கொள்ளாமல் அனைத்தையும் விற்றுவிடுவார்கள். இதனால் அங்குள்ள பயிர்த்திட்டம் மாறி புஞ்சை - மானாவாரி பலம் இழந்தது. தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால் 1970-வரை இங்கொன்றும் அங்கொன்றுமாகக் கிணறுகளில் ஏற்றம், கமலை தென்பட்டன. தமிழ்நாட்டில் நீர்ச்செலவு அதிகமுள்ள நெல்லும் கரும்பும் மெல்ல மெல்ல பழைய மானாவாரி நிலங்களை ஆக்கிரமித்தன. வடதமிழ்நாட்டில் குறிப்பாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ஏரி நீர்ப்பாசனமும், கிணற்று நீர்ப்பாசனமும் விளங்கி வந்தன. நீர்ச் செலவுள்ள பயிர் சாகுபடித் திட்டத்தில் கரும்பும் நெல்லும் பெற்ற முக்கியத்துவத்தினால் முதலில் பம்ப் செட் வந்தது. மேல்மட்ட நீர் கிடைக்காதபட்சத்தில் ஆழ்துளைக் கிணறுகள் வந்தன. தஞ்சை மாவட்டத்தில் ஆழ்துளைக் கிணறுகள் அறிமுகமாயின. ஏரிநீர் ஆழ்துளைக் குழாய்களுக்கு ரீசார்ஜ் ஆனதால் மானாவாரி நிலங்களில் முன்பு பயிரான புஞ்சை தானியங்களும், பருப்பு வகைப் பயிர்களும் வழக்கொழிந்தன. மானாவாரி ஏரிகள் சுத்தமாக வறண்டு ஆக்கிரமிப்புக்கு உள்ளாயின. இந்தக் காலகட்டத்தில் மற்றுமொரு நிகழ்ச்சியும் டென்மார்க் உதவியுடன் நிகழ்ந்தது. சமூகக்காடு வளர்ப்பு என்ற போர்வையில் மானாவாரி ஏரிகளில் கருவேல மரங்களை நட்டார்கள். ஏரிகளைச் செப்பனிட்டு நீர்வரத்துப் பகுதிகளில் புற்களை வளர்த்து - நீர்வரத்துக் கால்வாய்களைத் தூரெடுத்து, ஏரிகளின் கரைகளில் மரங்களை நடுவது நல்ல திட்டம். ஆனால், முதல்கட்டமாக ஏரியிலேயே மரம் நட்டு அதன் விளைவாய் ஏரி தூர்ந்தவுடன் ப்ளாட் போட நல்ல வசதியை டென்மார்க் - டேனிஷ் ப்ராஜக்ட். முப்பது ஆண்டுகளுக்கு முன்பு செய்து வழிகாட்டியுள்ளது. மானாவாரி நிலங்கள் மாயமாய் மறைந்து முழுக்க முழுக்கப் பாசனத்தையே நம்பிச் செய்யப்பட்டு வரும் விவசாயத்தில் அரிசி உற்பத்தியும் சர்க்கரை உற்பத்தியும் உயர்ந்திருக்கலாம். சத்து மிகுந்த உணவு உற்பத்தி மறைந்து நோய்க்குறியுள்ள உணவு உற்பத்தி முடுக்கிவிடப்பட்டது. மூன்றாவதாக, மக்காச்சோள சாகுபடி. மிகவும் சத்து நிரம்பிய இருங்குச்சோளம், வெள்ளைச்சோளம் பயிரான நிலங்களில் இன்று மக்காச்சோளம் காட்சி தருகிறது. மக்காச்சோளம் மாட்டுக்கும் கோழிக்கும் மட்டுமல்ல. பல கலப்படங்களுக்கு வித்து. பழங்கள் விளையாத அமெரிக்காவில் சிந்தட்டிக் ஸ்க்வாஷ் பிரபலம். மக்காச்சோள மாவு ஸ்டார்ச்சில் கந்தக அமிலத்தைக் கொட்டி செயற்கைப் புரதம், சர்க்கரை சேர்த்து ஆரஞ்சு வாசனைத்தூள் தூவி ""ஜிங்கோ'', ""பிங்கோ'' என்று பெயர்வைத்து நமக்கு இறக்குமதி செய்வார்கள். அதை ஆஹா, ஓஹோவென்று அதிக விலை கொடுத்து வாங்கும் இந்திய நடுத்தர வர்க்கம் புற்றுநோயையும் இதய நோயையும் விலைகொடுத்து வாங்குகிறது. நம்மிடம் எலுமிச்சை, திராட்சை, நன்னாரி, நெல்லிக்காய், தர்பூஸ், மாம்பழம் என்று கணக்கில்லாத ரகங்கள் உள்ளனவே. மானாவாரி சாகுபடி மறைந்துவிட்டதால், துவரை, வேர்க்கடலை, உளுந்து, பாசிப்பயறு போன்ற உற்பத்தி பெருமளவு குறைந்துவிட்டது. உண்மையில் வேர்க்கடலை, பருப்புவகையாகும். அதாவது லெக்யூம்ஸ் என்பார்கள். பொதுவாக தானியப் பயிர்கள் அறுவடையானதும் லெக்யூம்ஸ் பயிர்களைச் சாகுபடி செய்துவிட்டு மீண்டும் நெல், கேப்பை, கோதுமை பயிராகும்போது 50 சதம் தழைச்சத்து செலவில்லாமல் கிட்டும். அந்த அளவில் பருப்புவகைப் பயிர்கள் காற்றில் உள்ள நைட்ரஜனை வேரில் சேமிக்கும். பருப்பு விதைகளை ரைசோபியம் நுண்ணுயிரிக் கலவையில் நேர்த்தி செய்து விதைத்தால் பருப்பு விளைச்சலும் கூடுதலாகும். நமது முன்னோர்கள் கடைப்பிடித்த பயிர்ச்சுழற்சி மானாவாரி நிலங்களில் மட்டுமல்ல, பாசன நிலங்களிலும் உண்டு. இறுதியாக ஒரு விஷயம். நம்ம ஊர்மக்கள் சாம்பார் பிரியர்களாக இருக்கலாம். சாம்பாருக்குத் துவரம்பருப்பு வேண்டும். முன்பு சாம்பாரில் கடலைமாவு கலப்படம் செய்வார்கள். கடலைமாவில்கூட பட்டாணி மாவு கலந்திருக்கும். துவரையைவிட கடலைப்பருப்பு விலை மலிவு. அதைவிடப் பட்டாணி இன்னமும் மலிவு. இப்போது கலப்படப் பருப்புகளும் விலையேறிவிட்டது. பட்டாணிமாவைவிட விலை மலிவான மக்காச்சோள மாவு கலப்படம் பெருகிவிட்டது. அது மஞ்சள் நிறத்தில் உள்ளதால் கலந்தால் தெரியாது. மாடும் மனிதனும் ஒன்றாகிவிட்ட நிலை இன்று! மக்காச்சோள மாவைத் தவிட்டுடன் பிசைந்து கறவைப்பசுக்களுக்கு வழங்குவது உண்டு. கையேந்தி பவன் தொடங்கி கந்தவிலாஸ் ஓட்டல் வரை சாம்பாரில் மக்காச்சோள மாவு கலந்திருக்கும் வாய்ப்பு உண்டு. நல்ல மணமான துவரம்பருப்பில் ருசியான சாம்பார் தினமும் வேண்டும் என்றால், மீண்டும் மானாவாரிச் சாகுபடியை ஊக்குவிப்பதுதான் வழி. இது அரசின் கடமை என்பதைப் பொறுப்புள்ள ஆட்சித் தலைவர்களும் உணர்ந்து, ஆக்கபூர்வமாக நல்ல சத்துள்ள புஞ்சைத் தானியம் மற்றும் பருப்பு சாகுபடிக்குப் புத்தூக்கம் நல்குவது, நாட்டு மக்களுக்கு நல்லது. thanks for thinamany & ஆர்.எஸ். நாராயணன்

Monday 21 June, 2010

காடு வளர்ப்போம்!

தவறான வேளாண் சாகுபடி நுட்பங்கள், ரசாயன இடுபொருள்கள் தவிர பயிர் சாகுபடித் திட்டம் எனப் பல்வேறு அதிரடித் திட்டங்கள் மூலம் 1950-களில் விவசாயத்தில் வெற்றி காணச் செய்த முயற்சியின் விளைவு, சுற்றுச்சூழல் பாழ்பட்டுப்போய் விளையும் மண்ணே நோய்வாய்ப்பட்டுக் கிடக்கிறது.




இந்த நிலையிலாவது நாம் விழித்துக் கொள்ளாவிட்டால், இன்னும் குறிப்பிட்ட சில ஆண்டுகளில் பயிரினங்களுக்குத் தேவையான தண்ணீர் கிடைக்காது, உணவுப் பொருள் உற்பத்தி நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்குக் குறைந்து போவதோடு, நச்சுத்தன்மை மிகுந்ததாகவும் இருக்கும்.



தட்பவெட்ப நிலை மாறுபாடு ஏற்பட்டு பூமியில் பிரளயம் நிகழும். நாம் எதிர்கொள்ளவிருக்கும் இந்தச் சீர்கேடுகளையும், பேரழிவினையும் தடுக்க ஒரே வழி மரம் வளர்ப்பதுதான். அதுவும் ஒன்றல்ல, இரண்டல்ல; வனம் வனமாய், தோப்புத் தோப்பாய் காணும் இடமெல்லாம் பச்சைப் போர்வை படரச் செய்ய வேண்டும்.



மொத்தமுள்ள நிலப்பரப்பில் 3-ல் ஒரு பங்கு மரங்களும், செடி கொடிகளும் சூழ்ந்த தாவரப் போர்வையாக இருக்க வேண்டும். நம் நாட்டில் இப்போது 5-ல் ஒரு பங்குகூட தாவரப் போர்வை இல்லை. பசுமை இல்லை. வனங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்பட்டதன் விளைவுதான் இன்று நாம் அனுபவித்துக் கொண்டிருக்கும் வெப்பக்கொடுமை. முடிவு வறட்சி, பசி, பட்டினி, அழிவு.



÷மனித சமூகத்துக்கு இயற்கை கொடையாக வழங்கிய தாவரப் போர்வை அவரவரின் சுயநலப் போக்குக்காக அழிக்கப்பட்டது. அதன்மூலம் பொருளாதார ரீதியாக நொறுங்கிவிட்ட வேளாண்மையின் செயல்பாடுகள் குழம்பிப் போய்விட்டன.



தாவரப் போர்வை நிலத்தில் இருந்தால், தாவரப் பொருள்களுடன் அங்குள்ள உயிரினக் கழிவுகளும் ஒன்று சேர்ந்து மண்ணை வளமாக்குவதுடன், மண் புழுக்கள் மற்றும் நுண்ணுயிர்களின் இயக்கத்தால் மண் இறுக்கம் தளர்ந்து இளக்கமாகிறது. அதன்மூலம் மழைநீர் நிலத்தினுள் முழுமையாக ஊடுருவ முடிகிறது.



இந்த இயற்கை நிகழ்வுகளை நாம் அழித்துவிட்டதால் பெய்யும் மழைநீர் வளமான மண்ணையும் அரித்துக் கொண்டு விரைந்தோடி கடலில் கலந்து விடுகிறது. அதனால், மண் வளத்தை இழப்பதோடு, நிலத்தடி நீரும் குறைந்து கொண்டே போகிறது.



கூட்டம் கூட்டமாய் மரம் வளர்ப்பது ஒன்றே இதற்குத் தீர்வு. வறண்ட இடத்தில்கூட வளம் சேர்க்க மரங்களால் மட்டுமே முடியும். சில இன மரங்கள் மண் ஈரத்தையும், மழை நீரையும் விரும்புவதில்லை. ஏனெனில், அந்த மரங்கள் நிலத்தடி நீரை மட்டுமே விரும்பும். அதனால், நிலத்தடி நீரைத் தேடி கடினமான பூமியாயிருப்பினும் அந்த மரங்களின் பலம் மிகுந்த வேர்கள் பூமிக்கடியில் போய் நிலத்தடி நீரை மேலே கொண்டு வந்து விடும்.



இன்னும் சில மரங்கள் பூமிக்குள் ஆழமாக வேரோடு உள்ளே புகுந்துபோய், நிலத்தடி நீரையே தொட்டு விடும். இதன்மூலம், பல நூற்றுக்கணக்கான கிலோ மீட்டர் தொலைவிலுள்ள நீரைக்கூட தனது ஈர்ப்பு விசை மூலம் இழுத்து அந்த இடத்தில் மேலும் மரங்கள் வளர்வதற்கு உதவும்.



இப்படித்தான் தாவரங்கள் பெருகி பல்லுயிர் பெருக்கம் ஏற்பட்டு, மாசற்ற சுற்றுப்புற மண்டலம் உருவாகிறது. இந்தச் சுற்றுப்புற மண்டலத்தை மையமாகக் கொண்டுதான் உயிர் மண்டலம் உருவாகிறது. இப்படி இயற்கையிலேயே உள்ள உயிரினத்தை வாழவைக்கும் மரங்களை இனியாவது வளர்க்க வேண்டும்.



அழிப்பதை நிறுத்திவிட்டு, மரங்களை வளர்க்க வேண்டும். ஏனெனில், இயற்கை தேர்வின் மூலம் இயற்கையாக விதைகள் தானாக விழுந்து முளைத்து, இலையாகி, செடியாகி, மரமாகி வளர்ந்து பயன்தர பல ஆண்டுகள் ஆகும். அதுவரை காத்திருக்காமல் உடனே தாமே முனைந்து திட்டமிட்டு காடுகள் வளர்ப்பில் ஈடுபட வேண்டும்.



அப்படித் திட்டமிட்ட இயற்கை வன வளத்தை தாவரப் போர்வையாக உருவாக்க முனையும்போது, ஒளி ஈர்க்கும் தாவரங்கள், மித ஒளி ஈர்க்கும் தாவரங்கள், வெயிலைச் சமாளிக்கும் தாவரங்கள், நிழலை விரும்பும் தாவரங்கள் மற்றும் குத்துச்செடிகள், கொடிகள் எனத் தேர்வு செய்ய வேண்டும்.



இந்தத் தாவரங்களை முதன்மைத் தாவரங்கள், ஆதாரத் தாவரங்கள், 2-ஆம் நிலைத் தாவரங்கள், சிறந்த தாவரங்கள் என 4 வகைகளாகப் பிரிக்கலாம்.



÷இந்தத் தாவர வகைகள் மண் தன்மை, மண் வளம், தட்ப வெட்பநிலை, கடல் மட்டம், சுற்றுப்புற உயிரின மற்றும் மனித இயக்கம் உயிரின பன்முகத்துக்கான தொடர் நிலைகள் ஆகிய காரண காரியங்களின் அடிப்படையில், தாவரப் போர்வையின் உயரம், வளர்ச்சிப் பெருக்கம் மற்றும் குற்று இனங்களைக் கண்டறிந்து, திட்டமிட்டு அவற்றின் சார்பு மற்றும் தோழமைத் தாவரங்களை உருவாக்கினால் 10 ஆண்டுகளில் 10 ஏக்கரில் விளைந்து கிடைக்கும் பயன்களை 4 ஏக்கரில் பெற முடியும்.



அண்மை ஆண்டுகளில் வனங்கள் மிக வேகமாக அழிக்கப்பட்டு வரும் நிலையில், சாலை மேம்பாட்டுக்காகக் கணக்கில் அடங்காத மரங்கள் வெட்டிச் சாய்க்கப்படுகின்றன. அழிக்கப்படும் மரங்களுக்கு ஈடாக மரக்கன்றுகள் நடப்படுவதில்லை. உச்ச நீதிமன்றம் சாலை மேம்பாட்டுக்காக வெட்டப்படும் ஒரு மரத்துக்குப் பதிலாக 10 மரக் கன்றுகளை நடவேண்டுமென்று உத்தரவிட்டது.



இந்த உத்தரவு எத்தனை இடங்களில் பின்பற்றப்படுகிறது என்பது சந்தேகமே. எனவே, வன மரங்களை அழிப்பதைத் தவிர்த்து, மரம் வளர்ப்பில் ஈடுபட்டு, நாட்டுக்குப் பசுமை சேர்த்து, வீட்டுக்கு வளத்தைச் சேர்க்கலாம்.
 
 
ஆர். தங்கராஜு
 
நன்றி தினமணி

சென்னையில் இன்டர்வியூ நடக்கிறதுகேரிஃபோர் எனும் பிரபல சூப்பர் மார்க்கெட்டிற்கு

ஏகஇறைவனின் திருப்பெயரால்...
சவுதி அரேபியாவில் இயங்கும் கேரிஃபோர் எனும் பிரபல சூப்பர் மார்க்கெட்டிற்கு சென்னையில் இன்டர்வியூ நடக்கிறது கலந்து கொள்ளுங்கள்.


GREETINGS FROM JERRY VARGHESECONSULTANTS!
We Jerry Varghese International Ltd., are one of the leading overseas recruiters. We have head office in Mumbai, corporate office in Dubai and Branch office all over major cities of India.
At present we have a current urgent openings. The details are as follows.


 Client :
 CARREFOUR HYPERMARKET KSA.


Place : KINGDOM OF SAUDI ARABIA-------KSA
Web site : www.carrefourksa.com

AGE LIMIT : 21-29

1.STOCKER---1100 SR to 1400SR
2.SALESMEN----1100 SR to 1400SR
3.BAKER---1500SR to 1600 SR
4.BUTCHER---1500SR to 1600 SR

(S.S.L.C (OR) HSC(OR) ANY DEGREE)

Experience in supermarket, hypermarket,retail and sales,
and good communication skill is must.

If you are interested Please reply us within one week (30.06.2010). And send your resume along with your photo to the following mail id.

shankar@jvi-global.com;rajaram@jvi-global.com

We are hereby short listing the resume for the above profile. If you are interested to this requirement Please to forward your updated resume or contact undersigned. The interview is been schedule on First week of July 2010 in chennai . We will inform the date and venue details to the short listing candidate shortly.
Note: Please note that as this is a Oversease vacancy. You should have your Orginal Passport available in your hand.

WITH REGARDS

MR. SHANKAR
TEAM LEADER
TEL:044-42233510 DIRECT
EMAIL:shankar@jvi-global.com

MR.RAJARAM
RECRUITMENT EXECUTIVE
JERRY VARGHESE CONSULTANTS
NO.23,LADY MADHAVAN STREET,
MAHALINGAPURAM,
NUNGAMBAKKAM,(NEAR AYYAPAN TEMPLE), CHENNAI-34, TEL:044-42233508/510 DIRECT
EMAIL:rajaram@jvi-global.com, URL:www.jerryvarghese.com/applyonline

Saturday 19 June, 2010

சவுதியில்    From

Hameed



































كان الجو قبل البرديه حول 33 وبعد البرديه بارد ودرجة الحرارة تقريبا 10 مئوية .. والجو ضباب حتى نسمع اصوات ناس حولنا ولانراهم . بيننا وبينهم عشرين متر















لحظة تأمل































حجم البرديه كحجم البرتقاله ولاكن النفسيه زفت ما صورت البرديه الا عقب نص ساعه او زود



























ابتسامه برق تمير للعدسه















البرد بكثافه

Monday 14 June, 2010

Sunday 13 June, 2010

வேன் டிரைவரின் அலட்சியத்தால் ஓர் பச்சிளம் உயிர் பறிபோனப் பரிதாபம்.....

எங்கோ பிறந்த நீ, உன் பிரிவால் வாடும் நான்.

நெஞ்சு பொறுக்குதில்லையே உன் புன்முகத்தை பார்க்கயிலே.

பாடம் படிக்க பள்ளிக்கூடம் சென்ற நீ, இவ்வுலகத்தை விட்டே சென்று விட்டாயே.

உன்னைப்பாசத்துடன் கட்டித்தழுவ காத்திருந்த பெற்றோர்களோ, உன் உயிரற்ற உடலையல்லவாப் பெற்றுக்கொண்டனர்.

தனிமையில் வண்டிக்குள் நீ என்ன தான் சிரமப்பட்டாயோ, கதறினாயோ? உனக்கு உதவிட மனிதர்கள் இல்லாமல் போனார்களேஅங்கு.

அக்க‌டைசி நிமிட‌த்தில் உன் கூக்குர‌லை நினைக்கையில் என் உள்ள‌ம் ப‌த‌றுத‌ம்மா...எரிம‌லையாய் வெடித்துச்சித‌றுத‌ம்மா..

ஒரு ப‌க்க‌ம் உல‌கில் உயிர்க‌ள் ஏதோ நோக்க‌த்திற்காக‌ கொல்ல‌ப்ப‌டுகின்ற‌ன‌. ம‌றுப‌க்க‌ம் நோக்க‌மின்றி ப‌றிபோகின்றன.
காரணங்களை நான் யாரிடம் கேட்பேன்?

கோடிக‌ள் ப‌ல‌ உன் உயிருக்காக‌ கொட்டிக்கொடுத்தாலும் ‍

உன் பிஞ்சுக்குர‌லும், புன்முறுவ‌லும் நெஞ்சை என்றும் வ‌ருடும்.

உன் அர‌வ‌ணைப்பும், அன்பும் எங்க‌ளுக்குச்சொல்லும் மில்லிய‌ன் பாட‌ம். இத‌ற்கு ஈடேதும் உண்டோ?

க‌ட்டித்த‌ழுவ‌ உன் தேக‌மும், முத்த‌மிட‌ உன் இத‌ழும் இன்று இல்லாம‌ல் போன‌து ஏனோ?

க‌வ‌ன‌க்குறைவே உன‌க்கு இர‌க்க‌மில்லையா? உன் உற‌க்க‌த்தில் ஒரு உயிரை ப‌றித்தாயே?

இங்கு விளையாட‌ உன‌க்கு ஸ்நேகிதிக‌ள் இல்லாம‌ல் போயிருக்க‌லாம். விளையாட்டுப்பொருட்க‌ள் கிடைக்காம‌ல்இருந்திருக்க‌லாம்.

சொர்க்க‌த்தின் பூஞ்சோலையில் நீ விரும்பிய‌தைப்பெற்று வான‌வ‌ர்க‌ளுட‌ன் அந்த‌ வ‌ச‌ந்த‌ மாளிகையில் நீ ச‌ந்தோச‌மாக‌க‌ளைப்பின்றியும் க‌வ‌லையின்றியும் விளையாட‌ உன்னையும், எம்மையும் ப‌டைத்த‌ அந்த‌ இறைவ‌னிட‌ம் உன‌க்காக‌இறைஞ்சுகின்றேன்.

நேற்று சவுதி அரேபியா தம்மாமில் ஒரு பள்ளி வேன் டிரைவரின் அலட்சியத்தால் ஓர் பச்சிளம் உயிர் பறிபோனப்பரிதாபம்.....ப‌ற்றிஎன் உள்ள‌த்தில் உருவாகிய‌ அக்குமுற‌லை இங்கே ப‌திகின்றேன். அக்குழந்தையின் பெற்றோர்களுக்கு அல்லாஹ்பொறுமையைத்தந்தருள நாம் து'ஆச்செய்வோம் அது யாராக இருப்பினும் சரியே.


என‌வே நம் வீட்டு சிறுபிள்ளைக‌ளை ஏனோ, தானோ என்று த‌ன் க‌வ‌ன‌க்குறைவாலும், அல‌ட்சிய‌ப்போக்காலும், த‌ன்வேலை/தொழிலில் மட்டும் முழு க‌வ‌ன‌ம் செலுத்தி ம‌ற்ற‌ குடும்ப‌ விச‌ய‌ங்க‌ளை ச‌ரிவ‌ர‌ க‌வ‌னிக்காம‌ல் இருப்ப‌தால் இது போன்ற‌மீளாத்துய‌ர‌ ச‌ம்ப‌ங்க‌ள் அவ்வ‌ப்பொழுது ந‌ட‌ந்து விடுகின்ற‌ன‌. எல்லாம் வ‌ல்ல‌ ர‌ப்புல் ஆல‌மீன் இது போன்ற‌ துய‌ர‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் இனிஎங்கும் ந‌ட‌க்காம‌லும், கேள்விப்ப‌டாம‌லும் ந‌ம்மைப்பாதுகாத்து த‌ந்த‌ருள்வானாக‌. ஆமீன்...


இப்ப‌டிக்கு.

இச்ச‌ம்ப‌வ‌த்தை ப‌டித்ததும் உள்ள‌ம் உருகிய‌வ‌னாக‌ இருக்கின்றேன்.

மு.செ.மு. நெய்னா முஹ‌ம்ம‌து.

ஒப்பீடு... Comparison

அஸ்ஸ‌லாமு அலைக்கும் வ‌ர‌ஹ்...

எம்.ஏ.கே.யின் ஆக்க‌ம் அன்றாட‌ நிக‌ழ்வாகவும், நித‌ர்ச‌ன‌மாக‌வும் இருக்கிற‌து. அருமை.

"இந்தெ ஆம்புளெ ஒரே ஊட்டெக் கொடஞ்சிக்கிட்டு, சரியான பொண்ணஞ்சட்டியா ஈக்கிறாருமா...ஈனமாஈக்கிதுமா....அவ்வொளெ எல்லாம் பாருங்கெ வெளிநாட்டுக்கு போயி காசு,பணெத்தெ சம்பாதிச்சி சொத்துக்குமேலெ சொத்து வாங்கிப்போடுறாஹெ...பூரிப்பா ஈக்கிறாஹெ...இவரும் தான்ஈக்கிறாரு...வெருவாக்கெட்டுப்போயி.....இவரெ கலியாண முடிச்சி காலெமெல்லாம் கஷ்டம் தான்....ஏன் நசீபுஇப்படி?.....ஒருத்தருக்கும் வாணாமா இந்தெ பொல்லா நசீபு....ம்ஹும்...சொன்னாக்கோவம் மட்டும் பொசுக்குண்டுவந்துரும் இவ்வொளுக்கு அதுக்கு மட்டும் கொரச்சி இல்லெ ஒன்னு சொத்துப‌த்து உள்ள‌வ‌ரா ஈக்கனும், இல்லாட்டிப‌டிச்சி ப‌ட்ட‌ம் வாங்கின‌வ‌ரா ஈக்க‌னும்....ரெண்டும் இல்லாத‌வ‌ரை முடிச்சி உட்டுச‌னிய‌னாப்போச்சு....சாக்கால‌மாப்போச்சும்மா....
" இதை கேட்கும் ஆண் வர்க்கத்தின் மேல் அணுகுண்டை வீசி அவர்களுக்கு கொஞ்சம், நெஞ்சம் இருக்கும்ஆசாபாசங்கள் என்னும் பசுமையான புல்,பூண்டு கூட முளைக்காமல் போய் விடும் அவர்கள் உள்ளத்தில்...

க‌டெசியிலெ இந்த‌ பொம்புளெ வெளிநாடெப்ப‌த்தி என்னா ரொம்ப (பீத்துறா) அள‌க்கிறாண்டு அங்கெ போயிபார்த்தா....அங்கெ உள்ளெ வ‌ண்டவாள‌ம் த‌ண்டாவாள‌மெல்லாம் புரிஞ்சி போவது.... ராத்திரியிலெ அவன்,அவன்போன்லெ இல்லாட்டி இன்ட‌ர்நெட்லெ பொண்டாட்டி கிட்டெ குசு,குசுண்டு பேசுற‌தும், க‌ண்ணீர்வ‌டிக்கிற‌தும்...இன்னொரு ரூம்லெ போயி பார்த்தா மூலெயிலெ உக்காந்துக்கிட்டு ஊர்லெ எழுத‌ப்ப‌டிக்க‌ தெரியாமெஇருந்த‌வ‌ன் இங்கெ வ‌ந்து பட்ட‌ க‌ஷ்ட‌த்துலெ பெரிய‌ க‌விஞனா மாறிப்போய் ஏதோ எழுதுக்கிட்டு இருந்த‌வ‌ன் கிட்ட‌போயி பார்த்தா "ப‌ழ‌கிப்போன‌ பாலைவ‌ன வாழ்க்கையும்; பாழாய்ப்போன‌ வாலிப‌ வ‌ய‌சும்"ண்டு த‌லைப்பு போட்டுக‌விதை எழுதிக்கிட்டு இருக்கிறான். என்னெத்தெ சொல்ற‌து போங்கெ?

தெரிஞ்சு மிதிச்சாலும், தெரியாமெ மிதிச்சாலும் மிதிப‌ட்ட‌ எறும்புக்கு ரெண்டுமே ஒன்னுதான்" என்று சொல்வார்க‌ள்.பாவ‌ம் வெளிநாடுக‌ளில் மித‌ப‌ட்ட‌ எறும்பு போல் இங்கிருந்தால் க‌ஃபீலின் கிடுக்குப்பிடி ஊருக்குப்போனால்பொண்டாட்டியின் நெத்திய‌டி என்று அல்ல‌ல்ப‌டும் ம‌க்க‌ள் ஏராள‌ம்....மொள‌ன‌மாய் உள்ள‌த்திற்குள் அவ‌ன் அழுகும்அழுகை க‌ஃபீலுக்குத்தெரிய‌ப்போகிற‌தா? அல்ல‌து அவ‌ன் ம‌னைவி ம‌க்க‌ளுக்குத்தெரிய‌ப்போகிறதா? நிச்ச‌ய‌மாக‌இறைவ‌னைத்த‌விர‌ வேறு எவ‌ரால் இய‌லும்?


இன்னொருத்த‌வ‌ன் கிட்டே போயி ந‌ல‌ம் விசாரிச்சா அவ‌ன் சொல்றான்...இங்கே வ‌ந்து எல்லா சூழ்நிலையையும்ஏத்துக்கிட்டு க‌ஷ்ட‌ப்ப‌ட்டு ப‌ழ‌கிப்போன‌தாலெ எப்பொழுதாவ‌து ஊர்லெயோ அல்ல‌து இங்கேயோ ஏதாவ‌துச‌ந்தோச‌மான‌ நிக‌ழ்ச்சி ந‌ம‌க்கு ந‌ட‌ந்துச்சிண்டா அதை ம‌ன‌சு ஏத்துக்கிடாது ரொம்ப‌ செர‌ம‌ப்ப‌டுண்டு சொல்றான்...இதுஎப்புடி ஈக்கிது?

"போதும் என்ற‌ ம‌ன‌மே, பொன் செய்யும் ம‌ருந்து". என்று த‌மிழில் ப‌ழ‌மொழி இருந்தாலும் எல்லாவ‌ற்றிற்கும்முன்னோடியாக‌ மாம‌றை திருக்குர்'ஆன் "எல்லா சூழ்நிலையையும் மனதால் ஏற்றுக்கொண்டு நீ ச‌ந்தோச‌ப்ப‌ட்டுஇறைவ‌னுக்கு ந‌ன்றி செலுத்துபவனாக இரு" என்று சிம்பிளாக‌வும், தெள்ள‌த்தெளிவாக‌வும், ஆணித்த‌ர‌மாக‌வும்அன்றே சொல்லி விட்ட‌தை நாம் இங்கு சிந்திக்க‌ க‌ட‌மைப்ப‌ட்டுள்ளோம்".


இதுதான் ந‌ம‌க்கு அல்லாஹ் நாடுன‌து. உருண்டாலும், புரண்டாலும் அதுதான் நமக்கு கிடைக்கும்...(அத‌ற்காக‌முய‌ற்சி செய்யாம‌ல் இருந்து விட‌க்கூடாது அது எந்த‌ விச‌ய‌மாக‌ இருந்தாலும் ச‌ரி) என்று உறுதியான‌ந‌ம்பிக்கையுட‌ன் நாம் ந‌ம் வாழ்வை தொட‌ருவோமேயானால் எந்நாளும் ந‌ம‌க்கு பொன்நாளாக‌த்தான் அமையும்என்ப‌தில் எவ்வித‌ ஐய‌மும் இல்லை.

எம்.ஏ.கே. உங்க‌ள் க‌ட்டுரைக்கு என் சிறு பின்னூட்ட‌ம் தான் இது (என்னா ந‌க்க‌லாண்டு கேக்கிறிய‌ளா?)

இன்ஷா அல்லாஹ் வாய்ப்புக‌ள் இருப்பின் இன்னும் அதிக‌ம் எழுத‌லாம்.வஸ்ஸலாம்.

என்றும் அன்புட‌ன்.

மு.செ.மு. நெய்னா முஹ‌ம்ம‌து...




Thanks & Best Regards,

M.I. Naina Mohamed
Document Controller
(MCHF) Manifa Project
Kingdom of Saudi Arabia
É +966 3 5780160 Ext. 241
È+966 50 931 3398
¿: Naina.Mohamed@saipem.eni.it
Snamprogetti Saudi Arabia Ltd.

முறைமையில் திரியும் நீர்மேலாண்மை!

நாளுக்குநாள் உலகத்தின் பல்வேறு பகுதிகளில் தண்ணீருக்கான தேவைகளும் அதன்மூலம் ஏற்படும் விளைவுகளும் பெருகிக்கொண்டே இருக்கின்றன.
சரி,​​ இப்போது தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது?​ மேற்குத் தொடர்ச்சி மலைகளை ஒட்டியுள்ள கிராமப் பகுதிகளில்,​​ யானை வந்தது,​​ பயிர்களை நாசம் செய்தது,​​ மனிதர்கள் விரட்டினர்,​​ அவர்களை யானையும் விரட்டியது,​​ சிறுத்தை வந்தது,​​ அதை வனத்துறையினர் பிடித்தனர்;​ மிருகங்களின் அட்டகாசம் மக்கள் அச்சம்!​ என்ற செய்தி வராத நாளே இல்லை என்ற நிலைக்கு நாம் வாழும் இந்த மாநிலப்பகுதி வெகுவிரைவில் வந்து சேர்ந்துவிட்டது.​ முறைமையில் திரிந்ததன் விளைவு இது.
மலைக்காடுகளில் போதுமான நீர் வசதி இல்லாததாலும்,​​ உணவுத்தேவை ஏற்படுவதாலும் மிருகங்கள் தங்களின் வாழிடம் விட்டு மனிதர்கள் வசிக்கும் பகுதிக்கு வந்துவிடுகின்றன என்ற விளக்கம் சரியாக இருந்தாலும்,​​ ஏன் நீர் வசதி இல்லை?​ மிருகங்களுக்கு உணவுத் தட்டுப்பாடு ஏன் ஏற்பட்டது என்ற கேள்வி எழுவதைத் தடுக்க இயலுமா?
காடுகளில் மட்டுமல்ல,​​ முற்றிலும் மனிதர்கள் வாழும் பகுதிகளிலும் தான் நீர் குறித்தான பற்றாக்குறை அம்சங்கள் கணக்கிலடங்காமல் பெருகிவிட்டன.​ சுற்றிலும் தண்ணீரைத் தடைசெய்து தன்பலம் காட்டும் மனிதாபிமானமில்லாத மாநிலங்களை ஒட்டியுள்ள தமிழ்நாட்டில் இருப்பதை வைத்துக்கொண்டு சிறப்புற வாழ வேண்டிய வழிமுறைகள் நீர் மேலாண்மையில் முழுமையாகக் கடைப்பிடிக்கப்படவில்லை.
நமக்கு அளிக்கப்பட்டுள்ள-நமக்காக ஏற்படுத்தித் தரப்பட்டுள்ள நீர் ஆதாரங்களையும்,​ அதன் பாரம்பரியக் கட்டமைப்புகளையும் சிதிலமடையாமல் பாதுகாப்பதும்,​​ சிதிலமடைந்தவைகளைப் புனரமைப்பதுமான கடமை நமக்கும் இருக்கிறது என்கிற பொறுப்புணர்வு அனைவருக்கும் தேவையான ஒன்று.
இயற்கையான நீர்வழிப் பாதைகளின் பாதுகாப்புக்கு அரசும்,​​ சம்பந்தப்பட்ட பகுதிகளின் மக்களும்தான் காவலாளிகள்.​ நமது அடிப்படை உரிமைகளில் ஒன்று நன்னீர் பெறுவது.​ மேலும் நமக்குப் பிறகு வரும் தலைமுறைக்கு நாம் தரக்கூடிய வெகுமதி சரியான,​​ தேவையான அளவு நீர்கிடைக்கச் செய்வதாகும்.​ இது தலைமுறைகளின் தவிர்க்கவியலாத கடமை.​ எனவே நீர் நிர்வாகத்தில் சற்றும் பின்தங்கி விடாத கொள்கையுடையவர்களாக நாம் இருக்க வேண்டும்.​ இதில் மாற்றுக் கருத்து இருக்க​ முடியாது.​ இவ்விதமாக இருப்பதுதான் இன்றுள்ள நீர் பற்றாக்குறையால் ஏற்படும் சிக்கல்களுக்குத் தீர்வாக அமையும்.
பலநூறு ஆண்டுகளுக்கு முன்னர் உழவுத் தொழிலுக்கு இயற்கையான நீர்வளம் போதாது எனும் நிலையில்,​​ அரசர்களால் செயற்கையான நீர்வள அமைப்புகள் உருவாக்கப்பட்டன.​ வெள்ளச்சேதம் நேராதவாறும்,​​ வேளாண் தொழிலுக்கு ஏற்ப பாய்ச்சலுக்கு நீர் ஓடுமாறும் அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டன.
ஆறுகளுக்குக் கரைகள் ஏற்படுத்தலும்,​​ நீரைத் தேக்க வேண்டிய இடத்தில் அணை கட்டுவதும் திட்டமிட்டுச் செய்யப்பட்டன.​ பேராற்றின் மூலம் கண்ணாறும்,​​ கண்ணாற்றில் இருந்து கால்வாயும்,​​ கால்வாயில் இருந்து வாய்க்கால் வெட்டலும் நிகழ்ந்தன.​ இவை ​ செய்ய இயலாத இடங்களில் ஏரி,​​ குளங்களும் அரசர்கள் காலத்தில் வெட்டப்பட்டன.​ கண்ணாறுகளும்,​​ கால்வாய்களும் பெரும்பாலும் சோழநாட்டில் உருவாக்கப்பட்டன.​ ஏரி குளங்கள் அதிகமாகப் பாண்டிய நாட்டில் வெட்டப்பட்டன.​ இவ்விதமாக உருவாக்கப்பட்ட நீர் மேலாண்மைக் கட்டமைப்புகள் தகுந்த பயனைத் தந்தன.​ வேளாண்தொழில் பெருமை தரும் வளர்ச்சி அடைந்திருந்தது என்பதை வரலாறு நமக்குத் தெளிவுபடுத்துகிறது.​ ​
தமிழகத்தின் நீர்வளம் இந்தியாவின் நீர்வளத்தில் 2 சதவீதமாக இருக்கிறது.​ ஓர் இந்தியக் குடிமகனுக்குக் கிடைக்கும் நீரில் 3-ல் ஒரு பாகம்தான் தமிழகத்தில் வாழும் குடிமகனுக்குக் கிடைக்கிறது.​ தற்போதுள்ள நீர்வளத்தைச் செம்மையாகக் கையாளவும்,​​ பருவமழை காலங்களில் கிடைக்கும் நீரை உரியமுறையில் சேமிக்கவும் தகுந்த திட்டங்களையும் நடைமுறைகளையும் வகுக்க வேண்டும்.​ வகுக்கப்படும் திட்டங்களின் அடிப்படையில் மக்கள் அவற்றைப் பின்பற்றி வருங்கால சமுதாயத்துக்குக் காத்துத் தர வேண்டும்.
​ ஏரிகளும்,​​ குளங்களும்,​​ கண்மாய்களும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தக் கூடிய தாய்மடிகள்.​ நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த வேண்டும் என்கிற எண்ணம் வெறும் எழுச்சி முழக்கமாக மட்டுமே பார்க்கப்படும் நிலை மாற வேண்டும்.​ வேதனையைத் தீர்க்கும் மருந்து ​ அரசிடம் மட்டுமே இருக்கிறது என்பது ஒருபுறம் உண்மையாக இருந்தாலும் மக்களுக்கும் அதில் பங்கிருக்கிறது.​ ​
குளங்களும்,​​ ஏரிகளும்,​​ ஊருணிகளும்,​​ கண்மாய்களும் தனிநபர்களின் லாபநோக்கத்துக்காக,​​ மெகா விளம்பரங்கள் மூலம் விலைக்குப் பிரித்தளிக்கப்படும் ரியல் எஸ்டேட்டுகளுக்காக அமைக்கப்பட்டவை அல்ல.
​ அரசுத் துறைகளின் அட்டகாசமான அலுவலகங்கள் எழுவதற்குத் திட்டமிட்டு உருவாக்கப்பட்டவைகளும் அல்ல.​ வேளாண்பெருக்கத்துக்கும்,​​ உழுதுண்டு வாழ்வோரை உய்விக்கவும்,​​ மக்களின் நலன்மீது கொண்டுள்ள மேன்மையான அக்கறையின் வெளிப்பாடாகவும் அமைக்கப்பட்டவை.​ வெட்டப்பட்டவை.​
ஆனால் நமது மாநிலத் தலைநகரம் சென்னையில் ஏரிகளைத் தூர்த்து மேடாக்கிக் கட்டப்பட்ட நகரம் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?​ இதுபோலவே வளம்பல தந்த ஏரிகளும்,​​ குளங்களும் காணாமல் போய்க்கொண்டு இருக்கின்றன!​ கட்டடக் காடுகளாய் மாறிக்கொண்டு இருக்கின்றன.
தமிழகத்தின் மொத்த ஆற்றுப்படுகைகள் -​ 33 மொத்த நீர்ப்பாசனத் தேக்கங்கள் 52,​ மொத்த ஏரிகள் 39,000,​ இதில் வானம் பார்த்த ஏரிகள் 25,600.​ 18,26,906 கிணறுகளில் 13 லட்சத்துக்கு மேற்பட்ட கிணறுகள் மின்மோட்டார் வசதி கொண்டவை.​ மேற்கண்ட நீர்சேகரிப்புக் கட்டமைப்புகள் 95 விழுக்காட்டுக்கு மேல் பருவ மழையை மட்டுமே நம்பி உள்ளன.​ ​
பருவமழையால் கிடைக்கும் மொத்த நீரின் அளவு சராசரியாக 2,400 கோடி கனமீட்டர்.​ அருகில் உள்ள மாநிலங்களில் இருந்து பல்வேறு தடைகளைத் தாண்டி வரும் நீரின் அளவு சுமராக 1,200 கோடி கனமீட்டராக இருக்கிறது என ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
வாய்ப்புள்ள மொத்த நிலத்தடி நீர் 2,640 கோடி கனமீட்டர்.​ இதில் 1,320 கோடி கனமீட்டர் தண்ணீர் இறைக்கப்படுகிறது.​ இதனால் நிலத்தடி நீர் மட்டத்தின் அளவு அபாயகரமாகக் குறைந்து கொண்டே வருகிறது.
ஆறுகளிலும்,​​ நீர் வழிப்பாதைகளில் ஓடிவரும் தண்ணீரை நடக்க வைக்க வேண்டும்,​​ நடக்கும் தண்ணீரை நிற்க வைக்க வேண்டும்;​ நிற்கும் தண்ணீரை பூமியின் உள்ளே செலுத்த வேண்டும் என்கிற செயல்முறைகளால் மட்டுமே நீர் பற்றாக்குறை அபாயத்தில் இருந்து மீளமுடியும் என்று சுற்றுச்சூழல் மற்றும் நீர் மேலாண்மை ஆர்வலர்கள் குரல் கொடுப்பது எவ்வளவு பொருள் பொதிந்தவையாக இருக்கின்றன.​ ​
ஆற்றில் வருகிற நீர் மற்றும் குளம்,​​ குட்டைகள்,​​ ஏரிகள் போன்ற இன்னபிற நீர் ஆதாரக் கட்டமைப்புகளின் மீது அவசியமான அவசரமான,​​ அலட்சியமற்ற கவனம் கொள்ள வேண்டிய காலமிது.​ ​
நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் உள்ள காட்டு வளங்களை அதிகரிக்கச் செய்யத் தேவையான திட்டங்களை விரைந்து முன்னெடுக்க வேண்டும்.​ அத்திட்டங்களில் அப்பகுதி மக்களின் பங்கேற்பும் உறுதி செய்யப்பட வேண்டும்.
தமிழகத்தின் நதிகள் அனைத்தும் மேற்கு மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைகளைச் சார்ந்தே இருக்கின்றன.​ நீர்வளத்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில் காடுகளைப் பாதுகாப்பது,​​ காடுகளின் பரப்பளவை அதிகரிப்பது என்பது தான் தேவைக்கு ஏற்ப நீர் பெறுவதற்கான ஒருவழியாக இருக்கிறது என்பதை நாம் எண்ணிப்பார்த்துச் செயல்படுவது நல்லது.
ஏற்கெனவே உள்ள நீர்சேகரிப்பு அமைப்புகளை நூறு விழுக்காடு பயன்பாடு தன்மையுள்ளதாக உருவாக்குவது,​​ அவ்வமைப்புகளுக்கு நீர் வரும் சிறு சிறு பாதைகளை அடையாளம் கண்டு பராமரிப்பது,​​ அரசு நிலங்கள் மட்டுமல்ல,​​ தனியார் நிலங்களின் ஊடேயும் மண்கரைகள் அமைத்து மழைநீர் நிலத்தடிக்குப் போகக் கூடிய சூழலை ஏற்படுத்துவது,​​ மேலும் புதிய புதிய நீர் சேகரிப்பு அமைப்புகளை உருவாக்குவது போன்றவையே தண்ணீர் சேகரிப்பு நிலையமாக நமது மாநிலம் சிறப்புற உருவாக வழி செய்யும்.​ வீடுகள்,​​ கட்டடங்களிலும் நீர் சேகரிப்பு அமைப்புகள் அவசியம் இடம் பெற வேண்டும்.
"கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய் மற்று ஆங்கே எடுப்பதூஉம் எல்லாம் மழை' எனும் திருக்குறளும்,​​ "அமுதூறு மாமழை நீரதனாலே அமுதூறும்' எனப் பேசிய திருமந்திரமும் தொடங்கி வைத்த கருத்தாக்கத்தின் அடிப்படையில் பயணிப்போம்.
மழை நீர் சேகரிப்புச் செயல்பாடுகளில் இயன்ற பங்களிப்பை நல்குவது,​​ இருக்கின்ற நீர்வள ஆதாரங்களை அழியாமலும் மாசடையாமலும் தடுப்பது போன்ற செயல்களை வாழ்வின் ஓர் அங்கமாக ஏற்றுக் கொள்வது நமது நல்வாழ்வுக்கு உத்தரவாதமளிக்கும்.
புதிய வாழ்க்கை முறை,​​ பற்றாக்குறையற்ற தண்ணீர் வளம் என்பது தான் நமது நோக்கமாக இருக்க வேண்டும்;​ அது அவசியமும் கூட.​ இது அரசுக்கும் புரியும்;​ எனவே உரத்துச் சொல்லுவோம் "மாமழை போற்றுதும்!​ மாமழை போற்றுதும்!''
ம.தென்னரசு
நன்றி தினமணி

அதிரை கடற்கரை தெரு ஜும்மா பள்ளி திறப்பு விழா

அதிரை கடற்கரை தெரு ஜும்மா பள்ளி திறப்பு விழா
அன்பார்ந்த வெளிநாடுகளில் & உள்நாடுகளில் வாழும் அதிரை மக்களே, நாம் அனைவரும் ஆர்வமுடன் எதிர்பார்த்த-அதிரையின் நுழைவுவாயிலாம் கடற்கரைத்தெருவில் கட்டப்பட்டுள்ள ஜும்மா பள்ளி வரும் ஜுன் மாதம் 25 தேதி வெள்ளிக்கிழமையன்று அதிகாரபூர்வமாக திறக்கபட உள்ளது.அனைவரும் தெரு வேறுபாடுகளைகளந்து திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்

About This Blog

shahulhameed
saudi

பிரபலமான இடுகைகள்

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP