Powered by Blogger.

Saturday 13 October, 2012

பயண அனுபவம்

பயணத் தொடர் – பயண அனுபவம் என்றெல்லாம் ஏராளமாக வாசித்து இருக்கிறேன் தொடர்ந்து ஆங்காங்கே வாசித்தும் வருகிறேன். ஆனால், ஒருநாள் கூட இப்படி ஒரு விபரீதமான எண்ணம் வந்ததே இல்லை இந்த அதிரைநிருபர் தளத்தில் தொட்டதெல்லாம் ஸாரி தட்டியதெல்லாம் துலங்கும் தூண்டில்கள் ஏராளம் போடப்பட்டிருப்பது அதில் சிக்கியவர்களுக்கு நன்றாகவே தெரியும். அந்த அற்புதமான சூழல்களை ஆனந்தமாக அனுபவித்து வருவார்கள்.

என்னைப் பொறுத்த மட்டில் ஊர்களைச் சுற்றும் ஒருவனாக(!!?) நான் இல்லாவிட்டாலும் எந்த ஊருக்குச் சென்றாலும் அந்த சுவடுகளை அப்படியே மனத்தளவிலும் எனது மூன்றாம் கண்கள் ஊடேயும் சேமிப்பதில் தவறுவதில்லை. அவ்வாறு நாம் மட்டுமே சேமித்து அதனை பாதுகாப்பதில் என்ன பயன் !? என்று யோசித்துக் கொண்டிருக்கும்போது அதிரைநிருபர் போன்ற சிறப்பான மேடையுடன் கணினித் திரையில் கண்கொள்ளாக் காட்சிகள் படைக்கும் தளம் இருக்கவே இருக்கிறது நாம் கடைபோட என்று இங்கேயும் கடைவிரித்து விட்டேன்… வியாபர நோக்கில் அல்ல !


சென்ற முறை நான் ஊர் சென்ற போது ஒரு சிம் கார்டு (ஜிம் கார்டு என்போரும் ஜெல் போனில் பேசுகிறார்கள்) வாங்கினேன்.

அது லைஃ ப் கார்டு என்று சொல்லித் தலையில் கட்டியிருந்தார்கள், இந்த முறை (நான்கு மாதம் கழித்து) ஊர் சென்றதும் திருச்சி ஏர்போர்டில் ஜிம்மை அதாங்க, சாரி சிம்மை மாட்டினால் சிம்(முன்னு) பல் இளித்து விட்டது (கோபால் பல்பொடி எங்கே என்று). சிம்முக்கு லைஃப் என்றாலே நான்கே மாதம்தான் என்று அவர் கையில் அடித்துச் சொல்லாத அர்த்தமும் புரிந்தது. நான் நம்முடைய லைஃப் (வரைக்கும் உள்ள) கார்டு என்று நினைத்தது தவறு என்றும் புரிந்து கொண்டேன். வண்ணத்துப்பூச்சிக்கு வாழ்நாள் 21 நாள்தான் என்று படித்தது நினைவு வந்தது (harmys please confirm). அதே போல் சிம்முக்கு நாலுமாதம்தான் லைஃப் போலிருக்கிறது என்று மனதை தேற்றிக்கொண்டேன்.





திருச்சி ஏர்போர்ட்டில் இருந்து அதிரைக்குள் நுழைந்ததும் முதல் வேலையாக சிம்(முஞ்சி) கார்டு வாங்கிய கடைக்கு சென்று கேட்டால், அவரும் கூலாக “வேற ஒன்னு வாங்கிப் போடுங்க காக்கா” என்று கடைக்காரர் சொன்னார். (அடிக்கடி சிம் மாற்றுவதற்கு அசத்தல் காக்காவிற்கு யார் பதில் சொல்வதாம்) சரி பயணங்கள் எல்லாமே இனிப்பதில்லையே இளிக்கவும் செய்யுமே (அனுபவம்தான்) என்று வேறொரு சிம்(மு) கார்டு வாங்கிக் கொண்டுதான் வீட்டுக்குள்ளேயே நுழைந்தேன். நம் நாட்டில் (அட! நம்ம இந்தியாவில்) பத்து பைசா இருபது பைசா முப்பது பைசாக்களெல்லாம் பயன்படுவது மொபைல் ஃபோனில் மட்டும்தான். வேறு எங்கும் இந்த பைசாகளுக்கு மதிப்பு கிடையாது.





ஊரில் பொறடியை சொறிந்துகொண்டு சுகம் விசாரிக்க வருபவர்கள் கூட ஒரு மினிமம் கலெக்ஷன் காஸ்ட் என்று வைத்து இருக்கிறார்கள் (ஆளை பொறுத்து அவர்கள் டார்கெட் மாறும்). ஒரு ரூபாய் கொடுத்தால் அதை திருப்பித் திருப்பிப் பார்த்துவிட்டு நம்மிடமே தந்து விடுகிறார்கள்.(தூக்கி வீசாத குறைதான்). ஆனால், ஃபோன் ரொம்ப சீப்பாக இருப்பதால் யாரும் போனில் பேசும்போது விசயத்தை சுருங்க சொல்வதில்லை கம்பனுக்காக அகல இரயில் பாதைக்கு போட்ட பட்ஜெட் ஒதுக்கீடு போல் நீட்டி, அளந்து, முழக்கியோ நம் நேரத்தையும் வீணாக்கி விடுகின்றனர்.





இந்தியாவில் மொபைல் போனுக்கு கட்டணத்தை அதிகரிக்க வேண்டும், யாரை பார்த்தாலும் ஃபோன் பேசிக் கொண்டேதான் இருக்கிறார்கள். பேசுவது எல்லாம் வெட்டி பேச்சுக்கள், குறிப்பாக பகல் நேரங்களில் நெட் ஒர்க் பிசிபிசி என்று வரும். காரணம் பலவீடுகளில் சமையல் ரெசிபியை செல்போன்கள்தான் ஒலிபரப்புகின்றன. வெந்தயம் போட்டியா? கறிவேப்பிலையை கிள்ளிப்போடு – புளியை கடைசியில் ஊத்து தேங்காய் பால் தலைப்பால் ஊத்தணும் என்பதுதான் அந்த நேரங்களின் பிசிக்கு காரணம். நல்லவேளை சுவையும் மனமும் மொபைலில் அறிய முடியாமல் போனது

இதை ஏன் கேட்கிறீங்க இங்கே மேலே பாருங்க பைக்கில் போகும் போதும் தலை சோல்டரில் கவிழ்ந்து கிடக்குது. இரச்சிகடையில இருக்கிற தலை மாதிரி !? தோள்பட்டைக்கும் தலைக்கும் இடையே ஃபோன் மாட்டிக்கொண்டு முழிபிதுங்கி அவஸ்த்தைப்படுகிறது. மொபைல் ஃபோனை கண்டு பிடித்தவன் கூட இப்படி எல்லாம் வைத்துக்கொண்டு பேசுவார்கள் என்று கனவில் கூட நினைத்து பார்த்து இருக்க மாட்டார். சலூனில் ஷேவிங்க் பண்ணும்போது ஒருகையில் பிளேடு மாட்டிய கத்தி, மறு கையில் செல்போன் – அதுவும் ஃபோனில் யாரோடும் அவர் கோபமாக கையை அசைத்து அசைத்து பேசும்போது கத்தி கத்தி (என்று) சொன்னாலும் ஃபோனில் போடும் சண்டை எல்லாம் நினைவில் வந்து போகின்றது.






அத்துடன் மொபைல் ஃபோனைவைத்து ஃபோட்டோ எடுக்கும் பழக்கமும்(!!?) அதிகரித்துவிட்டது (எனக்கு போட்டியாக !!). முன்பெல்லாம் சுற்றுலாத் தளங்களுக்கு செல்ல நேரிட்டால்தான் அந்த இடங்களை அங்கே செய்யும் சேட்டைகள் அல்லது மறக்கவியலாத சூழலை ஃபோட்டோ எடுப்பார்கள். ஆனால் இப்போ எந்தந்த வலைத்தளங்களில் பதியலாம் என்று அயர்ந்து உரங்கும் பூனையிலிருந்து அடுப்பங்கரையில் ரெடியாகும் வட்டிலப்பம் வரையில் படமெடுக்க மொபைல் ஃபோன். என்ன்ங்க இப்போது வீட்டில் கொல்லையில் வாழைமரம் குலைபோட்டால் போட்டோ, முருங்கை மரம் காய் காய்த்தால் போட்டோ. மசுக்குட்டியைக்கூட மொபைலில் போட்டோ எடுக்கிறார்கள். இதல்லாமல் மொபைல் படக் கலை என்று யாரும் பேரு வச்சுடாதீங்க ! இதுல வாய்ஸ் ரெகார்ட் வேறு அல்லோலப்படுகின்றது.





அடுத்துதாக யாரை பார்த்தாலும் மொபைல் போனுக்கு அடுத்ததாக கையில் இருப்பது லேஅவுட். கண்ணில் பட்டவரை முதலில் நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள் என்று தப்பித்தவறி கேட்டுவிடக் கூடாது அப்படி கேட்டு விட்டால் அதன் பிறகு கையில் உள்ள லே அவுட் தான் பேசும். “நான்” என்று ஆரம்பிக்கும் அவர் என்ன பொம்புளை புள்ளையை பெத்துகிட்டு இன்னும் மனை வாங்காமல் இருக்கிறீர்கள் என்ற அதிரையின் அக்கறைகள் வார்த்தைகளில் தெறித்து வரும். இவர்கள் சொல்லும் வார்த்தைகளைக் கேட்டால் நாம்தான் அடுத்த மைசூர் மகாராஜா என்பதுபோல் ஒரு மாயபிம்பம் மனதில் ஓடும். அடுத்த இலக்கு கொட நாடுதான் என்ற பின்னி திரை விரியும். கழுகுக்கு மூக்கில் வியர்ப்பதுபோல் வெளிநாட்டில் இருந்து யார் வந்தாலும் இவர்களுக்கு வியர்த்துவிடும். இன்னும் சொல்லப் போனால் நாம் இங்கு டிக்கெட் எடுப்பதற்கு முன் அவர்களுக்கு நம் வருகை தெரிந்து விடுகின்றது . உப்பளத்தில் விளைவது உப்பு என்று மட்டும் உள்ளூரில் பிறந்த நமக்கு தெரியாவிட்டால் அதை எல்லாம் கூட வளம் கொழிக்கும் பூமி என்று நம் உச்சந்தலையில் வைத்துக் கட்டிவிடுவார்கள்.





இப்போது இந்த ரியல் எஸ்டேட் புரோக்கர்களில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு விகிதாச்சாரம் ஆண்களை விட கூடுதலாகி விட்டது இவர்களும் களத்தில் இறங்கி அடுப்பங்கரை வரை வந்து ஆசைகாட்டும் பெண்களும் அதிகரித்து விட்டார்கள். உடல் உழைப்பு இல்லாமல் தூக்கினார் போல வரும் ஒரு பெரும்தொகை கமிசன் என்று கைமாறுகிறது. ஆனால் இவர்கள் எல்லோரிடமும் காணப்படும் பொதுவான அம்சம் வாங்க “தம்பி டீ குடிக்கலாம்” என்று வலிய உபசரித்து அழைப்பார்கள். கடைசியில் காசு நாம்தான் அழுதாக வேண்டும். சில சமயம் ஒரு டீலிங்குக்குப் பின்னால் ஓன்பது பேர் இருக்கிறார்கள். பத்திரம் முடிந்ததும் பழைய நாகரத்தினம் சார் வீட்டு வாசலில் நின்று எல்லோருக்கும் ஆளுக்குக் கொஞ்சம் என்று பிரித்துக்கொண்டு “கொடுவாப்பிசுக்கு” வாங்கப் போய்விடுவார்கள். சொத்து விற்பவரும் வாங்குபவரும் கொடுவாபிசுக்கு வாங்கும் முன்னும் பின்னும் யோசிக்கின்றார்கள் ஆனால் இந்த ப்ரோகேர்கள் வீட்டில் தினமும் கொடுவா பிசுக்குதான். கொஞ்சம் கூடுதல் நேரம் இது போன்ற புரோக்கரிடம் பேசினால் நம் மூளை கொதித்து காது வழியாக வழிந்து வந்து விடும்.





ஊருக்கு சென்று வருபவர்கள் உங்களின் ஆறாவது அல்லது இப்போது புதிதாக சொல்கிறார்களே ஏழாவது அறிவை பயன்படுத்தி, மாலை வேளைகளில் இப்படிக் கூட்டம் கூட்டமாக மெயின் ரோட்டில் நின்று அதுவும் ஒரு பைக் போகக்கூட இடம் இல்லாமல்- பேட்டரி தீரும்வரை ஹாரன் அடித்தாலும் நகராமல் ஆணி அடித்தது போல் நின்று என்னதான் பேசுகிறார்கள் என்று யாராவது சொல்லுங்கள். குறிப்பாக பழைய அண்ணாசிலை, தைக்கால் ரோடு முக்கத்தில் இருந்து, பழைய போஸ்டாபீஸ்களும் ரோடுவரை இந்தக் கூட்டம் நின்று பேசிக் கொண்டே இருக்கிறது. இந்த சாயங்கால சட்டசபை கலைக்கப்பட்டால்தான் அந்த இடங்களில் நடக்கும் பைக் சறுக்கல்களும் விபத்துக்க தவிர்க்கப்படும்.





ஒருநாள் பட்டுக்கோட்டை போய் இருக்கும்போது பைக் ரிப்பேர் ஆகிவிட்டது. ஸ்பேர் கிடைக்கவில்லை. தஞ்சையில் இருந்து வாங்கி மாட்டி அடுத்தநாள் தருவதாக மெக்கானிக் கூறிவிட்டார். சரி என்று ஒண்ணாம் நம்பர் பஸ்சில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தேன். அப்போது இரு நடுத்தர வயது நண்பர்கள் பேசிக்கொண்டு வந்ததை கேட்கும் பொன்னான வாய்ப்பு கிடைத்தது. அவர்கள் பேசியதில் சில வார்த்தைகள் எனக்கு விளங்கவில்லை. இதைப்படிக்கும் யாராவது “தலைக்குமேல் தொட்டிருக்கும் அடைப்புக்குள்” இருக்கும் வார்த்தைகளை விளங்கினால் சொல்லுங்கள்.





•என்னப்பா ஆயிரம் ரூபா கைமாத்துக் கேட்டேன் ஒன்னும் சொல்லாமல் இப்படி “பாளிஸ்டரா” ஒதுங்கிட்டியே!

•இங்கிருந்து மல்லிபட்டினம் எத்தனை “கிலோ மீட்டு?”

•ஹோட்டல் வேலை என்றால் நிறைய “கிப்ஸ்” கிடைக்கும்னு சொல்றாங்களே! ஆனலும் வேண்டாம் என்று அவன் “பெட்ரோல் பேங்க்கிலே “ வேலை செய்யுறான்.

•நேற்று ராத்திரி வீட்டில் சிக்கன் “ஸ்பிரே.”யோட ஹாப் பாய்ளும்

•என்னப்பா உங்க அப்பாவுக்கும் சித்தப்பாவுக்கும் ஏதோ தகராறு என்கிறார்களே யாராவது ஒருவர் "காம்போசிஷன் " செய்து வச்சா என்ன?





அடுத்து ஒருநாள் முத்துப்பேட்டையில் இருந்து பட்டுக்கோட்டை வரும் வழியில் தாலுக்கா அலுவலகம் அருகே வரும்போது ஒரு வாலிபர் லிஃப்ட் கேட்டார்.





நானும் பைக்கை நிறுத்தி “எங்கு போகணும் என்று கேட்டேன்”.





“ராஜாமடம் போகணும்” என்றார். நான் அதிரை போகின்றேன் அங்கே இறக்கி விடாவா?” என்றேன்.





“சரி” என்று சொல்லி பைக்கில் ஏறி அமர்ந்தவரிடம்…





“எங்கு வேலை செய்கின்றிர்கள்?” என்றேன்.





“வேலைக்குத் தான் இண்டர்வியூ வந்து விட்டு போகிறேன்” என்றார்.





நானும் விடாமல் “என்ன வேலை?” என்றேன்.





அவரும் இறுக்கமாகச் சொன்னார் “தலையாரி வேலைக்கு 30 ஆட்கள் தேவையாம், மொத்தம் 230 பேர்கள் இண்டர்வியூ வந்தார்கள்” என்றார் .





நனோ “படிப்பு தகுதி என்னவாம்?” என்றேன்.





“பத்தாம் வகுப்பு தேறி இருக்க வேண்டும்” என்றவர் தொடர்ந்து “நான் எம்ப்லாய்மெண்ட் அலுவலகத்தில் பதிவு செய்து இருந்தேன் அங்கிருந்துதான் எனக்கு கடிதம் அனுப்பி இங்கு வரச்சொல்லி இருந்தார்கள்” என்றார்.





நம் ஊரில் மோட்டார் சைக்கிள் இல்லாத வீடே கிடையாது. ஆனால், படித்த யாரும் இதுபோல் எம்ப்லாய்மெண்ட் அலுவலகத்தில் எண்ணிக்கை எடுக்கும் அளாவுக்கு கூட பதிவு செய்து இருப்பதாக தெரியவில்லை.





தலையாரி என்றதும் என் நினைவுக்கு வந்தது இந்தியாவில் அடிமைத்தனம் தொடங்கும் இடம் இந்த V.A.O அலுவலகம்தான். இங்கு பார்த்தால் ஒரு பாழடைந்த டேபிள் (வெள்ளைக்காரன் விட்டு விட்டுப் போனதா?) ஒரு ஓட்டை நாற்காலி அதுவும் காலுக்கு பல சப்போர்ட் கொடுத்து ரீ-ப்பேர் பலகை அடித்து இருக்கும். இதில் தான் V .A .O . அமர்ந்து இருப்பார் அவருக்கு உதவியாக இரண்டு தலையாரிகள் தரையில்தான் அமர்ந்து இருக்க வேண்டும். இவர்கள் தரையில் உட்கார்ந்த இடத்தை பார்த்தால் தலைக்கு தேய்த்த எண்ணை சுவற்றில் ஒட்டி, ஒட்டி தலை சைசுக்கு பலவித அஜந்தா ஓவியங்களை காணலாம் . V .A .O இல்லாத நேரத்தில் இந்த தலையாரிகளின் அல்லபறை பேச்சு இருக்கே அது I A S . I P S . ரேஞ்சுக்கு இருக்கும் என்பது வேறு விசயம். சரி விசயத்திற்கு போவோம் .





நானும் தொடர்ந்து விடாமல் “இண்டர்வியூவில் என்ன கேள்வி கேட்டார்கள் என்றேன்.”





அவரோ “கல்லணையை கட்டியது யார்? தஞ்சை பெரிய கோயிலை கட்டியது யார்? (ஆகா சூப்பர் கேள்வி)” என்றார்





அட! நானோ “என்னது ஒன்றாம் இரண்டாம் வகுப்பில் கேட்கும் கேள்வியல்லவா என்றேன்.”





அதற்கு அவர் “ஆமாம் ஆனால் கடைசி கேள்விக்கு மட்டும் என்னால் மட்டும் அல்ல அங்கு வந்த அனைவராலும் பதில் சொல்ல முடியவில்லை” என்றார்.





விழி தூக்கி ஸாரி புருவம் உயர்த்தி “அப்படி என்ன கேள்வி என்றேன்.”





இறுக்கம் தளர்ந்து சற்றே கோபமான முகத்தோடு “இந்த வேலை உனக்கு வேண்டும் என்றால் ஒன்னரை இலட்சம் தரனும் என்றார்கள்!!!. ஏழு ஆயிரம் மாதச் சம்பள வேலைக்கு ஒன்னரை லட்சம் கொடுத்து சேர்ந்தால் நாங்கள் அந்த ஒன்னரை லட்சம் பணத்தை எப்படி நேர்மையாக சம்பாதிப்பது?” என்று கேட்டார்.





இவரின் இந்த கேள்விக் கனையும் நியாம்தானே ! இதற்கு பதில் சொல்லத்தான் என்னாலும் முடியவில்லை (!!). தெள்ளத் தெளிவாக ஒன்று மட்டும் புரிந்தது வேலையில் சேர இதுபோன்ற லஞ்சத்திற்கு விதை விதைக்கப்படும் இடம் இம்மாதிரியான வேலைக்கு சேருமிடமாக இருப்பதிலும் மாற்றுக் கருத்து இல்லை !





-Sஹமீத்






உலகம்

உலகம் எப்படி உருவானது என்ற சோதனை நடக்கின்றது . ஐரோப்பிய அணு ஆராய்ச்சிக் கழகம் இந்த சோதனையை நடத்துகிறது. உலகம் எப்படி உருவானது என்பதை கொஞ்சம் பிராக்டிலாக சோதனை செய்து பார்க்கப் போகிறார்கள் விஞ்ஞானிகள்.




அதாவது புரோட்டான்களையும் நியூட்ரான்களையும் அதி பயங்கர வேகத்தில் மோதவிட்டு வேடிக்கை பார்க்கப் போகிறார்கள்.(இது என்ன லண்டன் கந்துரி கடையா வேடிக்கை பார்க்க ) இதற்காக கிட்டத்தட்ட 300 அடி ஆழத்தில் 27 கி.மீ. தூரத்துக்கு வட்டமான சுரங்கம் அமைத்து அதற்குள் சப் அடாமிக் பார்ட்டிகிள்ஸ் (புரோட்டான், நியூட்ரான்) மோதிக் கொள்ளும் வட்ட வடிவ பைப்பை அதற்குள் அமைத்திருக்கிறார்கள். இதற்காக பல பில்லியன் டாலர்களை செலவிட்டுள்ளனர் ஐரோப்பிய நாடுகள். கிட்டத்தட்ட 5,000 விஞ்ஞானிகளின் கூட்டு சேர்ந்து இந்த டீம் வொர்க் நடக்கின்றது



தடிமனான இரும்பால் செய்யப்பட்டு ரீ-இன்போர்ஸ்ட் சிமெண்ட் மற்றும் பலவித ரசாயனங் களை கலந்து பூசி மொழுவி , அணு கதிர்வீச்சை தாக்குப்பிடிக்கும் பாதுகாப்பு கொண்ட இந்த கொல்லாய்டர்.எனும் ஆய்வு கலன்

தயார் செய்யப்பட்டு உள்ளது

இது அணுக்களை பிளக்க உதவும் வழக்கமான சைக்ளோட்ரான் மாதிரி தான்.இதன் செயல்பாடும் ஆனால், இதில் விஷேசம் என்னவென்றால் இதன் வேகம்.( என்ன இவன் எப்போ பார்த்தாலும் வேகத்தை பத்தியோ போட்டு அருக்கின்றானே என்று வேகமா புலம்புவது காதில் விழுது ) 1,800 'சூப்பர் கண்டக்டிங்' காந்தங்கள் புரோட்டான்களை ஒளியின் வேகத்தில் இந்த 27 கி.மீ. வளையத்தில் சுற்றவிடவுள்ளனர் சர்கஸில் கூண்டுக்குள் பைக்கில் சுத்துவார்களே அதுபோல் . LHC தன் முழு வேகத்தை அடைந்தவுடன் புரோட்டான்களையும் நியூட்ரான்களையும் வினாடிக்கு 600 மில்லியன் முறை நேருக்கு நேர் மோத விடப் போகிறார்கள்.(இதை எல்லாம் எப்படித்தான் எண்ணுகிறார்களோ )



அப்போது புரோட்டான்களி்ல் 7 டிரில்லியன் எலெக்ட்ரான் வோல்ட்ஸ் அளவுக்கு 'சக்தி' உருவாகும். அப்போது ஏற்படும் 'சப் அடாமிக் லெவல்' மாற்றங்களை இந்த 27 கி.மீ. வட்டத்தில் பொறுத்தப்பட்டு்ள்ள ஆயிரக்கணக்கான சென்சார்கள் அப்சர் செய்து அந்த விவரங்களை சூப்பர் கம்ப்யூட்டர்களில் பீட் செய்ய திட்டமிட்டு உள்ளனர் கிட்டத்தட்ட 15 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் ஒரு மாபெரும் வெடிப்பில் இருந்து தான் (Big Bang) பூமி உள்பட Universe தோன்றியது என கருதப்படுகிறது. அப்போது இருந்த சூழலை இந்த 27 கி.மீ. வட்டத்தில் உருவாக்கிப் பார்க்கப் போகிறார்கள்.அதாவது உலகம் எப்படி உறவானது என்று ஒரு ரிகர்சல் பார்க்க போகின்றார்கள்



இந்த வளையத்தில் புரோட்டான்கள் என்ன வேகத்தி்ல் சுற்றி வரப் போகின்றன என்பதை இப்படி ஈசியாக சொல்லாம் ஒரு வினாடியில் இந்த 27 கி.மீ. தூரத்தை புரோட்டான் 11,245 முறை சுற்றி வரும்.அடுபங்கரையை பூனை சுற்றி வருவதைப்போல்

இந்த அளவுக்கு வேகம் பிடித்த புரோட்டான்களை அப்படியே நேருக்கு நேர் மோத விடப் போகிறார்கள். (காட்டு மாடுகள் அனிமல் சேனலில் முட்டிககொள்வதுபோல்) இப்போது புரிகிறதா.. உள்ளே என்ன நடக்கப் போகிறது என்பது.



அணு என்றால் என்ன புரோட்டான், நியூட்ரான், எலெக்ட்ரான் ஆகிய 'சப் அடாமிக்' கூறுகளைக் கொண்டது தான் ஒரு அணு. குவார்க், பெர்மியான், குளுயான்ஸ் ஆகியவற்றால் ஆனது தான் ஒரு புரோட்டான்.



ஆக, LHCல் வைத்து அதிவேகத்தில் புரோட்டான்களை வட்டில் அப்பம் வைக்க முட்டை அடிப்பதுபோல் அடித்தால் குவார்க், பெர்மியான், குளுயான்ஸ், மின் காந்த கதிர்வீச்சு, வெப்பம் என புரோட்டான்கள் பலவாறாக அடித்து சிதறடிக்கப்படும் மேலும் Higgs Boson என்று ஒரு சமாச்சாரம்.உண்டு ஒரு சப்-அடாமிக் பார்ட்டிகிள் இருப்பதாக தியரியில் சொல்கிறார்கள். ஆனால், அதை யாரும் இது வரை நிரூபித்ததில்லை.அறிவியலில் எந்த விசயமாக இருந்தாலும் நிருபிக்கப்படவேண்டும் (சும்மா வாயால் விடும் புருடாவிற்க்கேல்லாம் வேலை இல்லை ) இதனால் இதை விஞ்ஞானிகள் 'கடவுளின் அணுத் துகள்' (God's particle) என்கிறார்கள். அப்படி ஒன்று இருந்தால் இந்தச் சோதனை மூலம் வெளியில் கொண்டு வரலாம் என்ற நம்பிக்கையில் 5000 விஞ்ஞானிகள் ஆனால், இது மிக ஆபாயகரமான ஆராய்ச்சி என உலகம் முழுவதும் கடும் எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளன. (கூடன்குள கதைதான் அங்கும் )உலகத்தின் கதையே முடியப் போகிறது என்று கூட சிலர் அவுத்தும் விடுகின்றார்கள்



இவ்வளவு வேகத்தில் சப் அடாமிக் அணுத் துகள்களை மோதச் செய்யும்போது பிளாக் ஹோல் (Black Hole) கூட உருவாகிவிடலாம் என்கிறார்கள். Black Hole என்பது நம் ஊரில் ஒரு சஹன் சோத்தை ஒரே ஆள் உள்ளே தள்ளுவிட்டு மறு சோறும் கேட்ப்பாரே அதுபோல் . உள்ளே போனால் போனது தான் எதுவுமே வெளியே வராது.. ஒளி-ஒலி உள்பட. (பிளாக் ஹோல் நேரத்தையும் கூட விழுங்கிவிடும்.. இது அதீதமான டெக்னி்க்கல் சமாச்சாரம். மண்டையை போட்டு ரொம்பவே குழப்பிக் கொள்ள வேண்டாம். இப்ப மட்டும் என்னவாம் தெளிவாவா இருக்கு என்று பலரும் புலம்புவது காதில் விழத்தான் செய்கின்றது



நமது அண்டத்தில் (Universe) ஏராளமான மண்டலங்கள்,கிழக்கு மண்டலம் மேற்கு மண்டலங்கள் அல்ல அதாவது கேலக்ஸிகள் (Galaxies) உள்ளன. நமது சூரியன், பூமி, கோள்கள் உள்ளிட்ட சூரிய குடும்பம் (D.M.K.குடும்பம் அல்ல ) இருக்கும் மண்டலத்தின் பெயர் பால்வெளி மண்டலம்



பல பில்லியன் சூரிய குடும்பங்கள் சேர்ந்தது ஒரு கேலக்சி. பல பில்லியன் கேலக்சிகள் சேர்ந்தது தான் யுனிவர்ஸ். இந்த யுனிவர்ஸ் தொடர்ந்து விரிவடைந்து கொண்டே போகிறது என்பது தான் மிக இன்ட்ரஸ்டிங்கான விஷயம்.

ஒரு சிறிய பட்டாணிக்கடலை சைசில் இருந்த யுனிவர்ஸ், Big bangல் வெடித்துச் சிதறி விரிவடைய ஆரம்பித்தது.. விரிவடையும்போது அதற்குள் உருவானவை தான் பூமி, கோள்கள், நிலாக்கள், (அது என்ன நிலாக்கள் நிலா தானே என்று கேள்வி வரும் அதாவது நமது பூமிக்கு ஒரு நிலாதான் மற்ற கோள்களுக்கு நான்கு ஐந்து நிலாக்கள் எல்லாம் உண்டு நாம் ஒருநிலாவை வைத்துக்கொண்டு பாட்டும் கவிதையும் போட்டு தாக்குகின்றோம் ). எரிகற்கள், சூரியன்கள் ஆகியவற்றை உள்ளடக்கியவைகல்தான் கேலக்சிகள்.



இன்னும் விரிந்து கொண்டே இருக்கும் அண்டத்தில் மேலும் மேலும் ஏராளமான கேலக்சிகள் உருவாகிக் கொண்டே இருக்கின்றன. கூடவே பிளாக் ஹோல்களும்.



இந்த பிளாக் ஹோல்கள் ஒளி-ஒலியை மட்டுமல்ல, சூரியன்களைக் கூட விழுங்கி ஏப்பம் விடும் சக்தி கொண்டவை.



இதனால் தான் இந்த அதிவேக சப் அடாமிக் பிளப்பு சோதனை ஆபத்தானது... இதனால் பிளாக் ஹோல் உருவாகப் போகிறது.. அப்படி உருவானால் அது பூமியையே விழுங்கலாம் என்ற அச்சத்தை கிளப்பி விட்டுவிட்டார்கள் .



ஆனால், அப்படியெல்லாம் ஏதும் நடந்துவிடாது என்கிறார்கள் இந்த ஆராய்ச்சியை நடத்தும் CERN மையத்தின் விஞ்ஞானிகள்.இதைத்தானே கூடங்குளத்திலும் நம் விஞ்ஞானிகள் சொல்கின்றார்கள்

எந்த ஒரு நாட்டில் விஞ்ஞானிகளும் பொது மக்களும் ஒத்து போகின்றார்களோ அந்த நாடுதான் முன்னேற்றத்தில் முன்னணியில் இருக்கும்.



இத்தனை பணம் செலவு செய்து உலகையோ பணையம் வைத்து இந்த ஆராய்ச்சியை செய்யும் இவர்கள் இந்த அல் குரானின் சுராவை பார்க்கதுது ஏனோ !!!!!



7:54. நிச்சயமாக உங்கள் இறைவனாகிய அல்லாஹ் தான் ஆறு நாட்களில் வானங்களையும், பூமியையும் படைத்துப் பின் அர்ஷின் மீது தன் ஆட்சியை அமைத்தான் - அவனே இரவைக் கொண்டு பகலை மூடுகிறான்; அவ்விரவு பகலை வெகு விரைவாக பின் தொடர்கின்றது; இன்னும் சூரியனையும்; சந்திரனையும், நட்சத்திரங்களையும் தன் கட்டளைக்கு - ஆட்சிக்குக் - கீழ்படிந்தவையாக(ப் படைத்தான்); படைப்பும், ஆட்சியும் அவனுக்கே சொந்தமல்லவா? அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய (அவற்றைப் படைத்து, பரிபாலித்துப் பரிபக்குவப்படுத்தும்) அல்லாஹ்வே மிகவும் பாக்கியமுடையவன்.

Monday 31 October, 2011

அதிரை ரயில்வே ஸ்டேஷன்

சமீபத்தில் சகோ ஜாகிர் மற்றும் அவர்களின் மகன் ஆகியோர் மலேசியாவில் இருந்து ஊர் வந்திருந்தனர் சகோ ஜாகிர் எப்போது
ஊர் வந்தாலும் ஊரின் பழமை வாய்ந்த இடங்களுக்கு நாங்கள் ஊர்வலம் போய் வருவோம் அதுபோல் இந்த முறை அதிரை ரயில்வே ஸ்டேஷன் போய் வந்தோம் நாங்கள் எப்போது வெளியோ போனாலும் எங்கள் கண்களை தலை கொண்டு வந்து விடும் எங்களின் கைகளோ எங்களின் மூன்றவது கண்ணான கேமராவை மறக்காமல் எடுத்துக்கொள்ளும்.

இப்போது அதிரை ரயில்வே ஸ்டேஷன்

 எங்களின் கேமராவினால்  அக்கு வேறு ஆணி வேறாக பிரிக்கப்பட்டு நமதூர்
சகோதரர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது  எல்லா ஊரிலும் ரயில் நிலையங்களை அந்த அந்த ஊர்காரர்கள்
வெளியூர் போகவும் வரவும் மட்டுமே பயன் படுத்துவார்கள்
ஆனால் நாம் அப்படி அல்ல நம் ஊர் ரயில்வே நிலையத்தை மானசிகமாக நேசிக்கின்றோம்
என்பதை யாரும் மறுக்க முடியாது



தற்போது மன்னார்குடிக்கு ரயில் விடுவதாக செய்திகள் வருகின்றன ரயில் இல்லாத ஊருக்கு பிராட் கேஜ் ரயில் போட்டு
குடுக்குறான் ரயில் உள்ள ஊருக்கு மீட்டர் கேஜ்ஜை மாற்றி கொடுபதில்லை என ரயில்வே துறை
ரயில் ரோட்டின் மீது சத்தியம் செய்து விட்டார்கள்





















Sunday 25 September, 2011

போட்டோக்கள்

 ஒரு இரவு நேர நிலா

 பள்ளிவாசலும் புறா கூடும்

 பட்டுக்கோட்டை தஞ்சாவூர் ரோட்டில் உள்ள பாலம்


 அதிரைக்கு உகந்த தென்னை மரங்கள்









தென்னை மரங்களும் வானவில்லும்


எனக்கு பிடித்த போடோக்கள்

ஹமீது

தம்மாம்













Tuesday 30 August, 2011

நோன்பு பெருநாள்

நாளை நோன்பு பெருநாள் என்று இன்று சற்றுமுன்பு அறிவிக்கப்பட்டுள்ளது
பெருநாளை முன்னிட்டு கறி ரூபாய் 300 விற்கப்படுகின்றது இருந்தும் .கறி வியாபாரம் மார்க்கெட்டில் களைகட்டி உள்ளது

கறிக்கடை இன்றும் நாளையும் வியாபாரம் படு சுறுசுறுப்பாக நடப்பதால் நாளை மீன் மார்க்கெட் கொஞ்சம் வியாபாரம் மந்தமாக இருக்கும்,





Saturday 4 June, 2011

அணுசக்தி

அணுசக்தியைப் பயன்படுத்தி கல்பாக்கத்தில் 2012-ல், 500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் கூடங்குளத்தில் 2012-க்குள் அணுசக்தியைக் கொண்டு 2,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்த முயற்சி நம் நாட்டில் முதன்முதலாக அதிவேக ஈனுலை என்கிற "பாஸ்ட் பிரீடர் ரியாக்டர்' நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அணு உலை அமைக்க ஏற்பாடுகள் நடை பெற்று வருகின்றன.












அறிவியலின் முனேற்றமாக இது இருந்தாலும் நம் அறிவை சில நேரம் கிள்ளிப்பார்த்து பல உயிர்களை அள்ளிச் சென்று விடுகின்றது இது மறைமுகமாகவும் சில நேரங்களில் நேரிடியகவும் பல சோதனைகளையும், வேதனைகளையும் தாரளம நமக்கு அள்ளித்தரகூடிய ஒன்றாக அமைந்து விடுகின்றன. காலத்தின் கட்டாயத்தால் இது போன்ற அணு உலைகளை நாம் அமைத்தாலும் அது தரும் பாடங்கள் நமக்கும் நமக்கு பின் வரும் நமது சந்ததிகளும் லேசில் மறக்க கூடியதாக ஒன்றாக இருக்காது என்பது மட்டும் உண்மை.


25 ஆண்டுகளுக்கு முன் ரஷியாவின் செர்நோபில் இந்த ஆண்டு ஜப்பானின் புகுஷிமா அணு உலை அசம்பாவிதங்களால் ஏற்பட்ட, இன்னும் ஏற்பட்டு வரும் மிகக் கொடிய கதிர்வீச்சுத் தாக்கங்களையும் உயிர் சேதங்களையும் பற்றி மகிழன்கோட்டை மன்னாரில் இருந்து கொள்ளுக்காடு குப்பன் வரை நன்கு அறிந்து வைத்திருக்கும் போது நமது நாட்டில் அணு உலை என்றதும் அடித்தட்டு மக்களில் இருந்து மேல் தட்டு மக்கள் வரை (விவரம் தெரிந்தவர்கள் இந்த தட்டுக்களுக்கு விவரம் சொல்லுங்கப்பா ) . அணு உலை ஆபத்து பற்றி அறிந்து வைத்துள்ளனர்.

கல்பாக்கத்தில் இந்த நவீன உலை நிறுவப்படவுள்ள செய்தி அனைவருக்கும் அடி வயிற்றில் உலையாய் கொதிக்கின்றது காரணம், 25 ஆண்டுகளுக்குப் முன் ஏற்பட்ட அணு உலை விபத்தில் இன்றும் செர்னோபிலில் உள்ள பாறைகள் அங்கு உள்ள தண்ணீரில் இருந்து கடுமையான அளவில் கதிர்வீச்சு வெளியாகிக்கொண்டே உள்ளது.


அறிவியலிலும், தொழில்நுட்பத்திலும் நமது நாட்டைக் காட்டிலும் மிக முன்னேற்றமடைந்த ஜப்பான் மற்றும் ரஷ்யா ஆகிய இந்த இரண்டு நாடுகளிலும் நடந்துள்ள விபத்து பற்றி தினமும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளது, இந்த இரு நாடுகளும் அணு உலைகளை கையாள்வதில் மிக தேர்ச்சி பெற்றவர்கள் ஆனால் அவர்களால் கூட இந்த அணு உலைகளை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. காரணம் மனித உடல்கள் இதன் கதீர் வீச்சை தாங்கிக்கொள்ள முடியாது .


நமது நாட்டில் இப்படி ஒரு அணு உலை பிரச்சினை வந்தால் நமது நாட்டு தொழில் நுட்பமும் அரசும் எந்த அளவுக்கு செயல்படும் என்பது ஒரு பெரிய கேள்வி குறியே ! சுனாமியால் பாதிப்பு தீயால் பாதிப்பு வெள்ளத்தால் பாதிப்பு என்றால் தொண்டு நிறுவனங்களும் பொது நல ஆர்வார்களும் போய் நின்று உதவி செய்து விடலாம் ஆனால் அணு உலை பாதிப்பு என்றால் நாம் அங்கு கச்சல் கட்டி முண்டா தட்ட முடியாது.


சென்னை அருகில் உள்ளது கல்பாக்ககம் இங்கு நிறுவப்படவுள்ள இந்த அணு உலை, ஜப்பானில் இந்த ஆண்டு சுனாமியால் தாக்கப்பட்டு, கட்டுப்பாடு இழந்து வெடித்து, கதிர்வீச்சைக் கக்கிய அந்த அணுஉலையைவிட, எந்தெந்த வகையில் பாதுகாப்பானது என்பது இது வரை யாருக்கும் புரியாத புதிராகவே உள்ளது. இங்கு சுனாமி தாக்கினால் எந்த வகை பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளன என்பதும் யாருக்கும் தெரியாது.

தற்போது அமெரிக்காவில் எந்த ஒரு அணு உலையும் புதிதாக நிர்மாணிக்கவில்லை (பார்டி உஷாராகிட்டான்கள்) காரணம் 1979-ம் ஆண்டு ஏற்பட்ட அணு உலை விபத்து அவர்களுக்கு நல்ல புத்தியை புகட்டி உள்ளது நாம் பாடம் படிக்கும் முன் உஷாரகிக்கொல்வது கொள்வது நமக்கும் நல்லது நமது சந்ததிகளுக்கும் நல்லது காரணம் அணு உலை என்பது அமைதியாக உறங்கிக் கொண்டு இருக்கும் மிக கொடிய மிருகம் இது வெளியோ கசிய தொடங்கினால் கட்டுப்படுத்துவது சுலபமல்ல இயற்க்கை சீற்றம் என்பது வரும் போவும் ஆனால் இந்த "செயற்கை சீற்றம் வரும் ஆனால் போகாது" இந்த செயற்கை சீற்றம் மனித குலத்திற்கே பெரும் நாற்றம் !










-S-ஹமீது

Wednesday 4 May, 2011

ராக்கெட் விடலாம் வாங்க!

இந்தியாவின் பிஎஸ்எல்வி-சி16 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் உள்ள ஏவுதளத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. ரிசோர்ஸ்சாட்-2, யூத்சாட். எக்ஸ்-சாட் ஆகிய 3 செயற்கைக்கோள்களுடன் இந்த ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. விண்ணில் ஏவப்பட்ட 18 நிமிடங்களில் 3 செயற்கைக்கோள்களையும் பிஎஸ்எல்வி ராக்கெட் சுற்றுவட்டப்பாதையில் செலுத்தியது.




சுற்று வட்ட பாதை என்றால் என்ன?


அங்கு யாருப்பா ரோடு போட போறதுன்னு நினைக்க வேண்டாம் இங்கு கணினியில் போடும் கோடு தான் அங்கு ராக்கெட் போகும் ரோடு. நாம் இங்கு இந்தியாவில் இருந்து செலுத்தப்படும் ராக்கெட் புவி ஈர்ப்பு விசையை தாண்டி (பூமியில் இருந்து கிட்டத்தட்ட 15 km வரை புவி ஈர்ப்பு விசை இருக்கும் ) 350 kmல் இருந்து 450 km மேலே பூமி சுற்றும் வேகத்திற்கு இணையாக இந்த செயற்கைக்கோள் இந்தியாவின் மேல் சுற்றிக்கொண்டு வரவேண்டும் அப்படி சுற்றிக்கொண்டு வந்தால் தான் நாம் நமது நாட்டின் போக்குவரத்து கனிம வளங்களை படம் எடுக்க முடியும்!.





எரிபொருள்





1206 கிலோ எடைகொண்ட ரிசோர்ஸ்சாட்-2 தற்போது விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. இதன் ஆயுள்காலம் 5 ஆண்டுகள். 5 ஆண்டுகள் பூமியை சுற்றிவரும் என்றால் இதற்க்கான எரிபொருளுக்கு என்ன செய்வார்கள் என்ற கேள்வியை நம்ம கவிக்காகா கவிதையாய் கே(கு)ட்டுவைப்பார் அதற்கான பதில் தான் கிழே.



நாம் புவி ஈர்ப்பு விசையை தாண்டி என்ன வேகத்தில் செயற்கைக்கோளை(அல்லது வெறு எந்த பொருளையும்) செலுத்தினோமோ(வீசுதல்) அதே வேகத்தில் அது பூமியை சுற்றிக்கொண்டே வரும் காரணம் அங்கு பூமியைப்போல் இழு விசை கிடையாது என்பதால் செலுப்தப்பட்ட .செயற்கைக்கோள் கொஞ்சம் கூட வேகம் குறையாமல் செலுத்திய வேகத்திலையோ பூமியை சுற்றி வலம் வந்துகொண்டே இருக்கும்.ஆகையால் 5 வருடமோ அல்லது 10 வருடமோ பூமியை செயற்கைக்கோள் சுற்றி வருவதற்கு எந்தவித் எரிபொருளும் அங்கு தேவைப்படாது




மின்சாரம்





செயற்கைக்கோள் செயல்பட தேவையான மின்சாரம் சூரிய ஒளியில் இருந்து சோலார் பேணல் மூலம் மின் உற்பத்தி செய்யப்பட்டு இந்த மின்சாரத்தை கொண்டுதான் செயற்கைக் கோளில் உள்ள கேமரா மற்றும் அதில் உள்ள மின்னணு சாதனங்கள் அனைத்தும் இயங்கும்.







கேமரா





செயற்கை கோளில் பொருத்தப்பட்டிருக்கும் கேமராக்கள் மிக துல்லியமாக புகைப்படங்களை எடுத்து கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பும் எந்த அளவுக்கு என்றால் ஜாகிர் வீட்டு மாடியில் ரூபவாகினி டிவி க்கு அன்று நாங்களாக செய்து கட்டிய ஆண்டனா இன்று எந்த நிலையில் உள்ளது என்பதனை மிக துல்லியமாக பார்த்துவிடலாம். அதுபோல் நொங்கு விற்கும் மாட்டு வண்டி கடற்கரை தெருவில் நிற்கின்றதா? தக்குவா பள்ளி வாசல் அருகில் உள்ளதா அல்லது மொத்த நொங்கையும் நம்ம MSM மொத்தமாக வாங்கி வீட்டுக்கு கொண்டுபோய்விட்டார ? என்பதனை கூட பார்த்தது விடலாம்.மேலும் பூமியில் நிகழும் பெரும் மாற்றங்களையும் இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.கடலில் மீன்கள் எங்கு அதிக அளவில் காணப்படுகிறன என்பதனை அறிந்து மீனவர்களுக்கு தகவல் கொடுக்கலாம்.






விண்ணில் இருந்து பூமியை பார்க்கும் போது மற்ற இடங்களை விட புனித மக்கா மிக தெளிவாக தெரிகின்றதாம்!



-- Shameed

Dammam

About This Blog

shahulhameed
saudi

பிரபலமான இடுகைகள்

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP