Powered by Blogger.

Saturday 4 June, 2011

அணுசக்தி

அணுசக்தியைப் பயன்படுத்தி கல்பாக்கத்தில் 2012-ல், 500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் கூடங்குளத்தில் 2012-க்குள் அணுசக்தியைக் கொண்டு 2,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்த முயற்சி நம் நாட்டில் முதன்முதலாக அதிவேக ஈனுலை என்கிற "பாஸ்ட் பிரீடர் ரியாக்டர்' நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அணு உலை அமைக்க ஏற்பாடுகள் நடை பெற்று வருகின்றன.












அறிவியலின் முனேற்றமாக இது இருந்தாலும் நம் அறிவை சில நேரம் கிள்ளிப்பார்த்து பல உயிர்களை அள்ளிச் சென்று விடுகின்றது இது மறைமுகமாகவும் சில நேரங்களில் நேரிடியகவும் பல சோதனைகளையும், வேதனைகளையும் தாரளம நமக்கு அள்ளித்தரகூடிய ஒன்றாக அமைந்து விடுகின்றன. காலத்தின் கட்டாயத்தால் இது போன்ற அணு உலைகளை நாம் அமைத்தாலும் அது தரும் பாடங்கள் நமக்கும் நமக்கு பின் வரும் நமது சந்ததிகளும் லேசில் மறக்க கூடியதாக ஒன்றாக இருக்காது என்பது மட்டும் உண்மை.


25 ஆண்டுகளுக்கு முன் ரஷியாவின் செர்நோபில் இந்த ஆண்டு ஜப்பானின் புகுஷிமா அணு உலை அசம்பாவிதங்களால் ஏற்பட்ட, இன்னும் ஏற்பட்டு வரும் மிகக் கொடிய கதிர்வீச்சுத் தாக்கங்களையும் உயிர் சேதங்களையும் பற்றி மகிழன்கோட்டை மன்னாரில் இருந்து கொள்ளுக்காடு குப்பன் வரை நன்கு அறிந்து வைத்திருக்கும் போது நமது நாட்டில் அணு உலை என்றதும் அடித்தட்டு மக்களில் இருந்து மேல் தட்டு மக்கள் வரை (விவரம் தெரிந்தவர்கள் இந்த தட்டுக்களுக்கு விவரம் சொல்லுங்கப்பா ) . அணு உலை ஆபத்து பற்றி அறிந்து வைத்துள்ளனர்.

கல்பாக்கத்தில் இந்த நவீன உலை நிறுவப்படவுள்ள செய்தி அனைவருக்கும் அடி வயிற்றில் உலையாய் கொதிக்கின்றது காரணம், 25 ஆண்டுகளுக்குப் முன் ஏற்பட்ட அணு உலை விபத்தில் இன்றும் செர்னோபிலில் உள்ள பாறைகள் அங்கு உள்ள தண்ணீரில் இருந்து கடுமையான அளவில் கதிர்வீச்சு வெளியாகிக்கொண்டே உள்ளது.


அறிவியலிலும், தொழில்நுட்பத்திலும் நமது நாட்டைக் காட்டிலும் மிக முன்னேற்றமடைந்த ஜப்பான் மற்றும் ரஷ்யா ஆகிய இந்த இரண்டு நாடுகளிலும் நடந்துள்ள விபத்து பற்றி தினமும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளது, இந்த இரு நாடுகளும் அணு உலைகளை கையாள்வதில் மிக தேர்ச்சி பெற்றவர்கள் ஆனால் அவர்களால் கூட இந்த அணு உலைகளை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. காரணம் மனித உடல்கள் இதன் கதீர் வீச்சை தாங்கிக்கொள்ள முடியாது .


நமது நாட்டில் இப்படி ஒரு அணு உலை பிரச்சினை வந்தால் நமது நாட்டு தொழில் நுட்பமும் அரசும் எந்த அளவுக்கு செயல்படும் என்பது ஒரு பெரிய கேள்வி குறியே ! சுனாமியால் பாதிப்பு தீயால் பாதிப்பு வெள்ளத்தால் பாதிப்பு என்றால் தொண்டு நிறுவனங்களும் பொது நல ஆர்வார்களும் போய் நின்று உதவி செய்து விடலாம் ஆனால் அணு உலை பாதிப்பு என்றால் நாம் அங்கு கச்சல் கட்டி முண்டா தட்ட முடியாது.


சென்னை அருகில் உள்ளது கல்பாக்ககம் இங்கு நிறுவப்படவுள்ள இந்த அணு உலை, ஜப்பானில் இந்த ஆண்டு சுனாமியால் தாக்கப்பட்டு, கட்டுப்பாடு இழந்து வெடித்து, கதிர்வீச்சைக் கக்கிய அந்த அணுஉலையைவிட, எந்தெந்த வகையில் பாதுகாப்பானது என்பது இது வரை யாருக்கும் புரியாத புதிராகவே உள்ளது. இங்கு சுனாமி தாக்கினால் எந்த வகை பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளன என்பதும் யாருக்கும் தெரியாது.

தற்போது அமெரிக்காவில் எந்த ஒரு அணு உலையும் புதிதாக நிர்மாணிக்கவில்லை (பார்டி உஷாராகிட்டான்கள்) காரணம் 1979-ம் ஆண்டு ஏற்பட்ட அணு உலை விபத்து அவர்களுக்கு நல்ல புத்தியை புகட்டி உள்ளது நாம் பாடம் படிக்கும் முன் உஷாரகிக்கொல்வது கொள்வது நமக்கும் நல்லது நமது சந்ததிகளுக்கும் நல்லது காரணம் அணு உலை என்பது அமைதியாக உறங்கிக் கொண்டு இருக்கும் மிக கொடிய மிருகம் இது வெளியோ கசிய தொடங்கினால் கட்டுப்படுத்துவது சுலபமல்ல இயற்க்கை சீற்றம் என்பது வரும் போவும் ஆனால் இந்த "செயற்கை சீற்றம் வரும் ஆனால் போகாது" இந்த செயற்கை சீற்றம் மனித குலத்திற்கே பெரும் நாற்றம் !










-S-ஹமீது

About This Blog

shahulhameed
saudi

பிரபலமான இடுகைகள்

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP