குறித்த நாளில் இருந்து ஆறுவருடம் தாமதமாக வந்துள்ளது இந்த போயிங் கம்ப்பெனியின் கனவு விமானம்
போயிங் 787 ( 786 அல்ல ) ட்ரீம் லைனர் அதி நவீன சொகுசு விமானம் .இந்த சொகுசு விமானம் அடுத்த சில வாரங்களில் பரக்க ரெடியாக உள்ளது .இதன் சிறப்பு உலகில் உள்ள விமானங்களில் இது தான் சொகுசு விமானம் இந்த சொகுசு விமானத்தை திட்டமிட்டபடி தயாரிக்க முடியவில்லை காரணம் பெரிய அளவில் ஆர்டர் கிடைக்கவில்லை (நமக்கு செய்தி தெரிந்தால் தானே ஆர்டர் கொடுக்கலாம் )விலையும் அதிகம் மேலும் தொழிலளர் வேலை நிறுத்தம் (நம்ம ஆளுங்க வேலை நிறுத்த டெக்னிக்கை அங்கும் சொல்லிபுட்டங்களா )இறக்கை பொருத்துவதில் டெக்னிக் ப்ராப்ளம் ஆகியவை இதன் வருகையை தாமதபடுத்தி விட்டது ,
இத்தனை தடைகளையும் தாண்டி சில நாட்களுக்கு முன்பு இந்த சொகுசு விமானம் வெள்ளோட்டம் விடப்பட்டது முதன் முதலில் "நிருபர்கள்" பயணித்தனர்
,
இதன் சிறப்பு உயரம் அதிகம் கொண்ட கேபின் சொகுசான பஞ்சு மெத்தைகள் கொண்ட இருக்கைகள் உள்ளுக்குள் அதி நவீன விளக்குகள் .மிக குறைந்த எரிபொருள் (கம்மிய சாப்பிடும் கூடுதலா வேலை செய்யும் நமக்கு ஆப்போசிட்ட இருக்குது ) மிக குறைந்த சத்தம் (எத்தனை D P ) என்பது தெரியவில்லை (சத்தைதை அளவிடும் முறைக்கு டேசிபால். D P என பெயர். )
இந்த விமானம் சிட்னிளிருந்து (சகோ ஹாலித் கவனிக்கவும் )சிகாகோ வரை நீண்ட பயணத்தை செய்யும் தகுதி உடையது என்பது குறிப்பிட தக்கது
.
சில ஆண்டுகளுக்கு முன் ஏற் பஸ் நிறுவனம் A 380 என்ற விமானத்தை அறிமுகப்படுத்தியது
இதற்கு பல நாடுகளில் இருந்து ஆர்டர் குவிந்தது இதற்கு போட்டியாகதான் ட்ரீம் லைனர் விமானத்தை தற்போது போயிங் கம்பெனி இதை களத்தில் இறக்கி உள்ளது
A 380 விமானத்தில் 500 கும் மேற்பட்டோர் பயணம் செய்யலாம் இதனால் நீண்ட தூர விமான சேவையில் ஏற் பஸ் எ 380 நல்ல வரவேற்பை பெட்ருள்ளது . இருபினும் ட்ரீம் லைனர் விமானத்தில் 290 பயணிகள் மட்டுமே பயணம் செய்யமுடியும்
இது நீண்டதூர பயணத்திற்கு ஏற்ற விமானமாக கருதப்படுவதால் இந்த விமானம் நீண்ட நாள் தமாதத்திற்கு பின் பயணிகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது இந்த கனவுலக விமானம்
Shahuhameed
Dammam
Monday, 20 September 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment